tamilnadu

நீலகிரியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை புனரமைத்திடுக

உதகை, செப். 2- நீலகிரியில் பெருமழை வெள் ளத்தால் சேதமடைந்த வீடுகளை உடனடியாக புனரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டக்குழு வலியுறுத்தி யுள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நீலகிரி மாவட்டக்குழு கூட் டம் உதகையில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.ராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், ஆர்.பத்ரி, மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் வருமாறு, அண்மையில் நீலகிரி மாவட் டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் மாவட்டத்தில் பல இடங்களில் வீடுகள் முற்றாக இடிந்தும், பலத்த சேதமடைந்தும் உள்ளன. இதில் பல வீடுகள் தாயகம் திரும்பியோர் மற்றும் பழங்குடி சமூகத்தை சார்ந்தவர் களின் வீடுகள் ஆகும். பொருளா தார ரீதியாக மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள இம்மக்கள் தற்போது வீடுகளை இழந்து மிக வும் துயரமான நிலைக்கு தள் ளப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்கள் மூடப்பட்ட நிலையில் சொந்த வீடுகளையும் இழந்துள்ள மக்கள் செய்வதறியாது நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.  எனவே, வீடுகளை இழந்து நிற்கும் மக்களுக்கு, அவர்தம் வீடு களை உடனடியாக புனரமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்த தலையீட்டை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, கேரளா வில் வெள்ளத்தால் வீடுகளை இழந்துள்ள 1,06,332 பேருக்கு உடனடியாக வீடுகளை கட்ட அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதைப் போல் நீல கிரி மாவட்டத்திலும் வீடுகளை புனரமைப்பதற்கான நடவடிக் கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டும்.  வெள்ள நிவாரண பணிக ளுக்கு அரசு முதற்கட்டமாக ஒதுக் கீடு செய்துள்ள ரூ.30 கோடி நிதி யையும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டு நிதி யையும் இதற்கென பயன்படுத் திட வேண்டுமென மாவட்ட நிர் வாகத்தையும், மாநில அரசை யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள் வதாக அத்தீர்மானத்தில் கூறிப்பி டப்பட்டுள்ளது.