tamilnadu

img

அவினாசியில் ரம்ஜான் கொண்டாட்டம்

அவினாசி, ஜூன் 5-சேவூர் தக்னி சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில், ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.புனித ரமலான் மாதத்தின் முப்பது நாட்கள் இஸ்லாமியப் பெருமக்கள் பகலில் உணவு உண்ணாமலும், நீர் பருகாமலும் இறை உணர்வோடு நோன்பிருந்து, ஏழை மக்களின் பசியாற உணவு அளித்து (புனித ரம்லான் மாதத்தில் தினசரி மாலை 6 மணிக்கு நோன்பு கஞ்சி அளித்து)  அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டி இஸ்லாமியர்கள் இறைவனை தொழுது    கொண்டாடி மகிழும் திருநாள் ரம்ஜான் திருநாள் ஆகும். இத்திருநாளில் சேவூர் தக்னி  சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் இஸ்லாமிய சமூகத்தினர் புத்தாடையணிந்து, காலை 9 மணி முதலே ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களை பரிமாறி  வந்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். பள்ளிவாசலில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு   கோபி சாலை, ராஜவீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, வடக்கு வீதி வழியாக ஊர்வலமாக வந்து மீண்டும் பள்ளிவாசலை அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல அவிநாசி, கானூர் தேவராயன்பாளையம் பகுதிகளிலும் ரம்ஜான் கொண்டாட்டம் நடைபெற்றது.