கோவை, அக்.22 - விசைத்தறி உதிரி பாகங்களின் விலையேற்றுத்துக்கேற்ப கூலியை உயர்த்தி வழங்குவதற்கு, ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஆட்சியர் பரிந்துரைக்கக் கோரி கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரி மையாளர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில், ஆட்சியர் நேர்முக உதவி யாளர் (பொது) உமா மகேஸ்வரி தலைமையில் பொதுமக்கள் குறை கேட்புக் கூட்டம் திங்களன்று நடை பெற்றது. இதில், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் பொருளாளர் ஈ.பூபதி உள்ளிட்டோர் அளித்துள்ள மனுவில், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத் தறிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 95 சதவிகித விசைத்தறிகள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு நூல் வாங்கி கூலிக்கு துணிகள் உற்பத்தி செய்து தருகின்றனர். துணி ரகங்களுக்கு ஏற்ப மீட்டருக்கு கூலி நிர்ணயிக்கப்படுகிறது. கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு கூலி நிர்ண யிக்கப்பட்டது. அதன்பின் கூலி உயர்த்தப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு முறை மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அச்சுப் பிணைத்தல், செட் இழை போன்ற விசைத்தறிகளுக்கு தேவையான உதிரி பாகங்களின் விலையும், டீசல், பெட்ரோலும் பல மடங்கு உயர்ந்துள் ளது. கூலியாட்களின் சம்பளமும் ஆண்டுதோறும் உயர்ந்து வரு கின்றன. ஆனால், துணிகளுக்கான கூலி மட்டும் பல ஆண்டுகளாக உயர்த்தப் படவில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்ட கூலி உயர்வும் முழுமையாக அமல்படுத்தப்பட வில்லை. தவிர, காலி பீம்களுக்கான வாடகையை விசைத்தறி உரிமை யாளர்கள் மட்டுமே வழங்கி வரு கின்றனர். பாவு நூல் தொகை வரவு, செலவு களை ரசீது மூலம் ஜவுளி உற்பத்தி யாளர்கள் எழுதிக்கொடுத்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பாவு நூல் வரவு, செலவு கணக்குகள் உரிய முறையில் எழுதிக்கொடுப்பதில்லை. இதேபோல், ஜவுளி உற்பத்தியாளர்க ளுக்கும், கூலிக்கு நெசவு செய்து தரும் விசைத்தறி நிறுவனங்களுக்கும் இடை யில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஆள்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட் டுள்ளன. கடும் நெருக்கடிக்கு இடை யில் விசைத்தறிகளை இயக்கி வரு கிறோம். எனவே, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கான கூலி உயர்வை அமல்படுத்துவதற்கு ஜவுளி உற்பத்தியாளர் நிறுவனங்க ளிடம் மாவட்ட ஆட்சியர் பரிந்து ரைக்க வேண்டும் என்று அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நஷ்டஈடு வழங்க வேண்டும்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழுத் தலைவர் சு.பழனி சாமி அளித்துள்ள மனுவில், கோவை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சாகுபடி செய்யப்பட் டுள்ள தென்னை, வாழை, மரவள்ளி, மக்காச்சோளம் உள்பட அனைத்து வித பயிர்களையும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகின்றன. ஆண்டு முழு வதும், அனைத்து வித பயிர்களை காட்டுப்பன்றிகளிடமிருந்து காப் பாற்ற அரசும் நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சேதப்படுத்தப் பபடும் பயிர்களுக்கு உரிய இழப் பீடும் வழங்கப்படுவதில்லை. எனவே, காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களை கணக்கிட்டு உரிய நஷ்டஈடு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மனுவில் தெரிவித்துள்ளார்.