திருப்பூர், ஜூலை 13 – திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பொது மக்களிடையே மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சனியன்று நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் அரசுப் பள்ளி மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பல்லடம் மங்கலம் சாலையிலுள்ள அரசுப் பள்ளி முன்பாக இந்த ஊர்வலத்தை பள்ளித் தலைமையாசிரியை துவக்கி வைத்தார். மங்கலம் சாலை, என்.ஜி.ஆர். சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று மீண்டும் பள்ளியைச் சென்றடைந்தது. மாணவியர் தங் களது கைகளில் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.