tamilnadu

காற்றின் வேகம் அதிகரிப்பால் மழை பொழிவு தாமதம்

 கோவை, ஜூன் 20- தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி யும் மழையின் அளவு குறைவாகவே உள்ள சூழலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதே மழை பொழிவு குறைவுக்குக் காரணம் என்று வேளாண்மை பல்கலை கழகம் அறிவித்துள்ளது.  தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால், இந்தாண்டு சற்று தாமதமாக கடந்த 10ம் தேதி தொடங் கியது. கோவையை பொருத்தவரையில் 50 ஆண்டுக ளில் 210 மி.மீட்டர் என்று சராசரி மழை பெய்துள்ளது. இந்த சராசரி மழை அளவை ஒப்பீடு செய்கையில் இந் தாண்டு மழை அளவில் எந்தவித மாற்றமும் இருக் காது என்று கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. ஆனால், பருவமழை காலம் தொடங் கியும் கோவையில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை.  இந்நிலையில், காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் மழை குறைந்துள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கால நிலை ஆராய்ச்சி மைய துறை தலைவர் சுப.ராமநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சாதாரணமாக 7 முதல் 8 கி.மீட்டர் வரையில் இருக்கும் காற்றின் வேகம், தற்போது 15 கி.மீட்டர் வேகத்தில் வீசி வருகிறது. இதன் காரணமாகவே பருவமழை தொடங்கியும் மழை அளவு குறைவாக உள்ளது. இம்மாத இறுதிக்குள் இந்த நிலை மாறும். மழை நாட்கள் குறையும். இருந்த போதிலும், கடந்த காலங்களில் பெய்த மழை அளவை எட்டிவிட முடியும். ஜூலை முதல் பருவமழை தொடங்கும். மழை நீரை சேமித்து விவசாயம் மேற்கொள்ள வேண்டும். இதன் அவசியத்தை விவசாயிகள் உணர்ந்து மழை நீரை சேமிப்பதற்கு உண்டான அனைத்து தொழில்நுட்பங்களையும் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு சுப.ராமநாதன் கூறினார்.