tamilnadu

பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை பிளாஸ்டிக் பையில் கொடுப்பதை கண்டு கொள்ளாதது ஏன்?

 திருப்பூர், ஜூலை 13 - பன்னாட்டு நிறுவனங்களின் பொருட் கள் பிளாஸ்டிக் பையில் வழங்குவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருக் கிறது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்ர மராஜா கூறினார். திருப்பூரில் வெள்ளியன்று செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்த விக்ரமராஜா மேலும் கூறியதாவது: பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் தமிழக வியாபாரிகளை அதிகாரிகள் அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும். மாநில அரசு பிளாஸ்டிக் பொரு ளுக்கான மாற்று பொருள் அறிமுகப் படுத்தபின் வியாபாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் பொருட் கள் பிளாஸ்டிக் பையில் வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் அதனை மாநில அரசு கண்டுகொள்வதில்லை.  ஜி.எஸ்.டி வரி விதிப்பில் எளிய நடை முறை கொண்டு வருவதாக தெரிவித்தனர். ஆனால் அதில் தெளிவான விளக்கம் இல்லை. இது குறித்து மத்திய அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளோம். வாடகை கட்டிடத்திற்கு  ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிக்க வேண்டும். பெரும்பாலான வணிக நிறுவனங்கள் வாடகை கட்டிடத்திலேயே செயல்படுகிறது. வெளிநாட்டு நிறுவ னங்கள் கடை திறப்பதற்கு முயற்சி நடை பெறுகிறது. உள்நாட்டு வணிகத்தை காப் பதற்கு அரசு நடவடிக்கை வேண்டும் என்று  விக்ரமராஜா கூறினார்.