பொன்னமராவதி, நவ.8- புதுக்கோட்டை பொன்னமராவதி வி.என்.ஆர். கட்டு மான நிறுவனம், அரிமா சங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டுமான பொறியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது. பொன்னமராவதி அரிமா சங்கப் பொருளாளர் பொறியாளர் வி.என்.ஆர் நாகராஜன் தலைமையில் நடை பெற்ற முகாமில் இலவச நிலவேம்பு குடிநீர் வாராப்பூர், பூவாளபட்டி, கட்டையம்பட்டி காலனி, கட்டையம்பட்டி அரசுப்பள்ளி அருகே, குரும்பலூர், சடையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.