அவினாசி, ஜூலை 1- அவிநாசி புதிய பேருந்து நிலையம் பின்புறமாக பல ஏக்கர் பரப்பளவிலான குளத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு பொதுப்பணித்துறை அனுமதி யளித்துள்ளதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. அவிநாசி புதிய பேருந்து நிலையம் பின்புறமாக தினசரி மார்க்கெட் செயல்பட்டு வரு கிறது. இதனருகில் பல ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள் ளது. இந்நிலையில் அவிநாசி பேரூராட்சியில் 18 வார்டுகளில் அள்ளப்படுகின்ற குப்பைகள் இந்த குளத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இதேபோல், அருகில் அமைந்துள்ள பனியன் கம்பெனி உள்ளிட்ட பல தனியார் நிறு வனங்களின் கழிவுகளும் இங்கு தான் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அடிக்கடி இந்த குப்பைகளுக்கு தீ வைத்து சென்று விடுவதால், அப்பகுதி முழுவதுமே புகைமண்டலமாக மாறி சுற்றுச் சூழல் மிகப்பெரிய அளவில் மாசுபடுகின்றன. இதனால் குளத்தை சுற்றி வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகின்ற னர். இதுகுறித்து பேரூராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, பொதுப்பணித் துறையின் கட் டுப்பாட்டில் உள்ள இந்த குளத் தில் பேரூராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்கு ஒரு ஏக்கர் அள வில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. அதன் காரணமாக குப் பையை கொட்டுகிறோம். அதே நேரம், இதை பயன்படுத்தி அவி நாசியில் உள்ள சில தனியார் நிறுவனங்களின் குப்பைக் கழி வுகளும் கொட்டப்பட்டு தீ வைத்து விட்டுச் செல்கின்றனர். இதன் காரணமாகத்தான் மாசுபடு கின்றது. இதை தடுக்கும் வகை யில் வருகின்ற நாட்களில் கண் காணிப்பு கேமரா பொருத்தப் படும். மேலும் பாதுகாப்புக்கு காவலாளி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் தேவி என்பவர் கூறுகையில். பொதுப் பணித்துறைக்கு சொந்தமான குளத்தில் முன்பே பேருந்து நிலையம், மார்க்கெட் போன் றவை செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குப்பைகள் கொட்டுவதால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது டன், மழை காலங்களில் அப்பகு திகளில் வழிந்தோடும் மழை நீரை யும் கூட சேமிக்க முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தற்போது தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தா டும் நிலையில், வேலியே பயிரை மேய்ந்த கதை போல பொதுப் பணித்துறையும், பேரூராட்சி நிர்வாகமும் இந்த காரியத்தை செய்துள்ளது. ஆகவே, குளத்தில் குப்பை கொட்டுவதை உடனடி யாக நிறுத்த வேண்டும். அவினா சியில் உள்ள குளம், குட்டைகளை தூர்வார வேண்டும். குளங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தார். அருண், அவிநாசி.