tamilnadu

img

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

இளம்பிள்ளை,  நவ.18- இடங்கணசாலை பேரூராட்சி  13 வது வார்டு பகுதியில் முறையாக குடிநீர் விநியோகிக்கக்கோரி அப்ப குதி மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை பேரூராட்சி உட்பட்ட 13 ஆவது வார்டு மோட்டூர் பழக்கார தோட்டம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த மூன்று மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்பட வில்லை. இதனை கண்டித்து அப் பகுதி சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக் கும் மேற்பட்டோர் திங்களன்று இளம்பிள்ளை- காக்காபாளையம்   செல்லும் வழியிலுள்ள மகுடஞ்சாவடி காவல் உதவி மையம் அருகே  திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலறிந்தது வந்த  மகுடஞ் சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் துரை சபாபதி உள்ளிட்ட காவலர்கள் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார். ஆனால், சம்பந்தப்பட்ட அதி காரி வரும் வரை மறியலை கைவிட மாட்டோம் என்று பொதுமக்கள் உறுதிபட தெரிவித்தனர்.  இதைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பின் செயல்  அலுவலர் (பொறுப்பு) மேகநாதன், சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறி யலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் குடிநீர் வராத பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்பொழுது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் குடிநீர் ஆப்ரேட்டர் சித்து ராஜ் என்பவர் வசதி படைத்தவர்கள் மற்றும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளிடம்  பணம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட பகு திகளுக்கு மட்டும் தங்கு தடையின்றி தண்ணீர் விநியோகத்தை மேற் கொண்டு வருகிறார்,  அதேநேரம், ஏழை, எளிய மக்கள் வசிக்கும் எங்கள் பகுதிக்கு மட்டும் குடிநீர்  விநியோகம் செய்வதில்லை என்று ஆவேசமாக குற்றம் சாட்டினார்.  இதனைக் கேட்டறிந்த செயல் அலுவலர், உங்கள் பகுதிக்கும் சீரான குடிநீர் கிடைக்க வழி வகை செய்யப் படும் எனவும், ஆப்பரேட்டர் மீது எழுந் துள்ள குற்றச்சாட்டுகள்  விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர். இந்த சாலை மறியலால் அப்பகு தியில் சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.