tamilnadu

img

மின் மாற்றியை மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை

 அவிநாசி, மே 15-அவிநாசியில் இருந்து புளியம்பட்டி வரை சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இச்சாலை அருகில் உள்ள மின்மாற்றியால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசியில் இருந்து புளியம்பட்டி வரை சாலையை நெடுஞ்சாலை துறையின் சார்பில் விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. சூரிய பாளையம் பிரிவில் நீண்ட நாட்களாக சாலையோரமாக மின்மாற்றி உள்ளது. இந்நிலையில் சாலைக்கு அருகில் உள்ள மின்மாற்றியை மாற்றியமைக்காமல் விரிவாக்க பணி நடைபெறுவதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த சாலையில் பள்ளி குழந்தைகள்செல்லும் வாகனங்கள், பனியன் நிறுவனங்களின் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் சாலையோர மின் மாற்றியால் விபத்துகள் ஏற்படவாய்ப்புள்ளது. எனவே மின்மாற்றியை மாற்றி அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.