tamilnadu

மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் ஆலையில் நச்சு வாயு கசிவால் பொதுமக்கள் பாதிப்பு

ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்திட சிபிஎம் வலியுறுத்தல்

சேலம், நவ. 4- மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் ஆலை யிலிருந்து வெளியேறும் நச்சு வாயு கசிவால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு உடனடியாக தலை யிட்டு ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்திட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம்  மாவட்டச் செயலாளர் பி.ராம மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, சேலம் மாவட்டம், மேட்டூர் குஞ் சாண்டியூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கெம்ப்ளாஸ்ட் நிறு வனம் செயல்பட்டு வருகிறது. இதில் பிளாண்ட் 4ல் ஏற்கனவே சிலிக்கான் வேப்பர் உற்பத்தி செய் யப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண் டுகளுக்கு முன்பாக மேற்கண்ட ஆலையின் உற்பத்தியை நிறுத் திய நிர்வாகம், அந்த ஆலையின் வளாகத்திற்குள்ளேயே விரி வாக்கம் என்ற பெயரில் ஹைட்ர ஜன் பெராக்சைட் எனும் ரசா யனத்தை தொழிற்சாலையில் உற்பத்தி செய்வதற்கான முயற்சி களை மேற்கொண்டு வருகிறது. மேலும், இவ்வாலையில் பயன் படுத்தப்படும் இயந்திரங்கள் ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் இயங்கிக் கொண்டிருந்த பழைய இயந்திரங்கள் ஆகும்.  இச்சூழலில் கடந்த 16.07.2019 அன்று இரவு வெள்ளோட்டமாக இயந்திரத்தை இயக்கி, உற்பத் தியை துவக்கியபோது கடுமை யான வாயு கசிவுகள் ஏற்பட்டு, அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு மூச்சுத்திணறல், சுவாச கோளாறு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆலையின் வளா கத்தின் முன்பு கூடி பிரச்சனை களை தெரிவிக்க காத்திருந்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் சார் ஆட்சியர் மற் றும் காவல்துறையினரிடம் பொது மக்கள் முறையிட்டுள்ளனர். சம்ப வத்தை கேட்டறிந்த அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையின் கார ணமாக உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் சார்பில்  மாவட்ட ஆட்சியர் மற்றும் தமி ழக முதல்வரிடம் மனு அளிக்கப் பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் மனு அளிக்கப் பட்டது.

இந்நிலையில் கடந்த அக்.13 ஆம் தேதியன்று மீண்டும் இயந் திரங்கள் இயக்கப்பட்ட நிலையில் ஆலையிலிருந்து கடுமையான வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயுவை சுவாசித்த பொதுமக் கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆலை வளா கத்திற்கு முன்பு நியாயம் கேட்டு கூடினர். அப்பொழுது அங்கிருந்த மேட்டூர் சார் ஆட்சியரும், காவல் துறை அதிகாரிகளும் இந்த வாயு கசிவு சம்மந்தமாக மாநில சுற்றுச் சூழல் வாரியம் அடங்கிய குழுவு டன் பேச நேரம் ஒதுக்கப்பட்டு,  அக்கூட்டத்தில் பல்வேறு தரப் பினரும் தங்களுடைய கருத்துக் களை எடுத்துரைத்துள்ளனர்.

அதேநேரம், ஒரு ரசாயன ஆலை உற்பத்தியை துவங்குவ தற்கு முன்பாக அப்பகுதி மக்களி டம் ஆலையில் பயன்படுத்தப்ப டும் ரசாயனத்தின் தன்மை அத னால் ஏற்படும் விளைவுகளை சமா ளிப்பது எப்படி என்பது குறித்து கலந்தாய்வுடன் கூடிய கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதுதொடர் பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவில்லை. இதேபோல், ஏற்கனவே பிளாண்ட் 2, 3 ஆலை களின் நச்சு கழிவுகளால் சுற்றுப் பகுதி கிராமங்கள் பாதிக்கப் பட்டதுடன் நிலத்தடி நீர் விவ சாயத்திற்கோ, குடிப்பதற்கோ தகுதியற்றதாக மாறியுள்ளது. இதன் மீது பல்வேறு புகார்கள் சுற்றுச்சூழல் துறையிடம் கொடுக் கப்பட்டு விசாரணையில் உள் ளது. மேலும், பிளாண்ட் 2,3,4 ஆகிய ஆலைகளில் ஆபத்து  மிகுந்த ரசாயன உற்பத்தி செய் யப்படுகிறது. இவ்வாலைகளில் கடந்த காலங்களில் நிரந்த தொழி லாளர்களாக இருந்தவர்களை விருப்ப ஓய்வு திட்டத்தில் வீட் டுக்கு அனுப்பிவிட்டு பயிற்சியா ளர்களைக் கொண்டு, மேற்கண்ட இரசாயன உற்பத்தி செய்யப்படு கிறது. மேலும் 60 வயதிற்கு மேற் பட்ட ஓய்வு பெற்ற தொழிலாளர் களைக் கொண்டு ஆபத்தான நிலையில், பாதுகாப்பற்ற சூழ் நிலையில் 16 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை வேலை வாங்கப்படுகிறது. இவ்வாறு நிர் வாகத்தின் லாப வெறியால், அனைத்து தொழிலாளர், தொழிற் சாலை சட்டங்களை மீறி இவ் வாலையை இயக்கப்படுகிறது.  இதன் மீது அனைத்து மட்டத்தி லும் எழுப்பப்பட்ட புகார்களுக்கும் ஆலை நிர்வாகம் எவ்விதத்திலும் தங்கள் நடவடிக்கையை சரி செய்து கொள்ளவில்லை.

இதற்கிடையே, மேட்டூர் சார் பதிவாளர் மட்டத்தில் கடந்த  அக்.13 ஆம் தேதியிலும், அதை  தொடர்ந்தும் பேச்சுவார்த்தை கள் நடைபெற்று கொண்டிருக்குக் போதே நிர்வாகத்தின் தூண்டுத லின் பேரில் 160க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து, கைது நடவடிக்கை யில் ஈடுபட்டு வருகின்றனர். தவ றிழைத்த நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசும், மாவட்ட நிர்வாக மும் ஆலையின் நச்சு வாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து, இரவு நேரங் களில் வீடு புகுந்து கைது நடவ டிக்கையில் ஈடுபட்டு வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான கண்டனத்தை தெரி வித்துக் கொள்கிறது. எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடி யாக தலையிட்டு ஆலை நிர்வா கத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சேலம் மாவட் டக்குழு சார்பில் கேட்டுக்கொள்வ தாக அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.