tamilnadu

img

சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பள்ளியின் மேற்கூரை சேதம்

தருமபுரி, பிப்.21-  நல்லம்பள்ளி அருகே பள்ளியின் மேற் கூரை சேதமானதை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத் துள்ள பாகல்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியின் மேல்கூரையின் ஓடுகள் உடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இதனால் 2015ஆம் ஆண்டு பள்ளி அருகே புதிய கட்டிடம் கட்டப்பட்டு தற்பொழுது பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. அதேநேரம், பழைய பள்ளிக்கூடம் பரா மரிப்பு இன்றி உள்ளது. இதனால் இரவு  நேரங்களில் சமூக விரோதிகளின் கூடார மாக மாறி உள்ளது. மேலும் இப்பள்ளி  வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை  உள்ளது. பள்ளிக்கூடம் செயல்படாமல்  இருப்பதால் காந்தி சிலையும் மிகவும் சேதம்  அடைந்து உள்ளது. எனவே பள்ளியை  சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;