tamilnadu

விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கிடுக

நாமக்கல், செப்.8- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பள்ளி பாளையம் வட்டாரத்தில் விசைத்தறி தொழிலில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்க வேண்டுமென சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பள்ளிபாளையம் வட்டாரத்தில் விசைத்தறி தொழில் பணிபுரியும் அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் பிப்.7  ஆம் தேதியன்று 10 சதவிகிதம் கூலி உயர்வு வழங்க வேண்டும். தொழிலாளர் சாலை தூய்மையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்து தர வேண்டும். மே தினத்திற்கு ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கும் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்துக்கும் 15.3.2019 அன்று உடன்பாடு ஏற்பட்டது.  இந்த உடன்பாட்டின்படி சில  தொழிற்சாலைகள் மட்டுமே கூலி உயர்வும், அரியர்ஸ் வழங்கப்பட்டன. சில தொழிற்சாலைகளில் கூலி உயர்வு மட்டும் வழங்கினார்கள். ஆயக்கட்டூர் ஆவித்திபாளையம் அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலை களில் அரியர்ஸ் வழங்கப்படவில்லை.  இந்நிலையில் உடன்பாடு ஏற்பட்டு 6 மாதங்கள் கடந்தும்  கூலி உயர்வு உள்ளிட்ட அம்சங்களை விசைத்தறி உற்பத்தி யாளர்கள் அமல்படுத்தவில்லை. இதனால் தொழி லாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந் நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்தத்தை அமல் படுத்த மறுப்பதால் விசைத்தறி நிர்வாகங்கள் தொழி லாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கவில்லை என கூறு கின்றனர்.  மேலும் ஒரு சில உற்பத்தியாளர்கள் அடப்புத் தறி நெசவாளர்களுக்கு கூலி குறைப்பதாக அறிவித்துள் ளனர். எனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிபாளையம் வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்கத்தை நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என மாவட்ட செயலாளர் எம்.அசோகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.