tamilnadu

img

ஆட்டோ தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் நிவாரணமாக வழங்கிடுக

சிஐடியு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

ஈரோடு, மே 8- கொரோனா அச்சுறுத்தலால் வாழ்வா தாரம் இழந்துள்ள ஆட்டோ ஓட்டுநர்க ளுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் நிவாரணமாக வழங்கிட வேண்டுமென கோரி சிஐடியு சங்கத்தினர் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட் டம் மற்றும் மனு அளிக்கும் இயக்கத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சிஐடியு ஈரோடு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  கொரோனா அச்சத்தால் அரசாங்கமே ஊரடங்கை அறிவித்து வாகனப் போக்கு வரத்தை நிறுத்தியுள்ளது. நமது அரசியல மைப்புச் சட்டம் பிரிவு 21-ஆனது அனைவ ரது வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பு. அதன்படி பேரிடர் காலத்தில் வருவாயிழந்துள்ள மக்களுக்கு அரசு நிவாரணம் கொடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தங்களது ஊழியர் கள் ஊதியம் பெறுவதை உறுதிப்படுத்தி யுள்ளது. தனியார் ஆலைகளில், நிறுவனங் களில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் முறைசாரா தொழிலாளர்களான ஆட்டோ ரிக்சா ஓட் டும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத் தைப் பாதுகாக்க வேண்டும் என்ற வகை யில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், பராமரிப் பாளர்களுக்கும் முழுமையான நிவாரணம் அரசால் வழங்கப்பட வேண்டும். 

தமிழகத்தில் செயல்படும் 17 நலவா ரியங்களில் ஒன்றான ஆட்டோ, வாடகைக் கார் ஓட்டுநர் நலவாரியத்தின் மூலம் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாயும், உணவுப் பொருட் களும் வழங்கப்பட்டன. வாரியத்தில் உறுப்பினர் அல்லாதவர்கள், உறுப்பினர் பதிவை புதுப்பிக்காதவர்களுக்கு வாரி யத்தின் மூலம் உதவி கொடுக்கப்பட வில்லை. ஒவ்வொராண்டும் பதிவு செய்து இயக்கப்படும் ஆட்டோ ரிக்சாக்கள் அனைத்தும் தகுதிச் சான்று பெறும்போது நலவாரியத்திற்கான வரி செலுத்துபவர்கள் ஆவர். வாரியத்திற்கு ஓவ்வொராண்டும் வரி செலுத்துகிற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வாரிய உறுப்பினர் பதிவு இல்லை என்கிற  காரணத்தை முன்வைத்து உதவி மறுக்கப் பட்டது நியாயமானதல்ல. எனவே, மாநில அரசு குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா பரவல் தடுப்பு பேரிடர் கால நிவாரண நிதியாக மாதம் ரூ.15 ஆயிரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் அனைவருக்கும் வழங்கிட வேண்டும். அதேபோல ஆட்டோ ரிக்சா பராமரிப்பு வேலை செய்பவர்களுக்கும் வழங்கிட வேண்டும். மேலும், கொரோனா  பரவல் இல்லாத பச்சை மண்டலத்தில் பொதுப்போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பின்படி மாவட்ட ஆட்சியர் ஆட்டோ ஓட்டுநர்கள் நிலைமையைப் பரிவு டன் அணுகி ஆட்டோ போக்குவரத்திற்கு அனுமதி வழங்க வேண்டுகிறோம். அத்துடன் காவல் துறையினர் பிடித்து  வைத்துள்ள ஆட்டோக்களை நிபந்தனை யின்றி விடுவிக்க வேண்டும் என்றும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. 

கோவை

இதேபோல், கோவை மாவட்டத்தில் ஆட்டோக்களை இயக்க அனுமதி அல்லது  நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் வழங்க  வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை யில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் தனிம னித இடைவெளியோடு கோரிக்கை பதாகை ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பி யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்ன தாக, ஆர்எஸ்புரம் உள்ளிட்ட பகுதிக ளில் ஆட்டோ தொழிலாளர்கள் போராட்டத் தில் ஈடுபட காவல்துறையினர் அனுமதி  மறுத்தனர். இதையடுத்து எங்களின்  உரிமைகளுக்காக குரல் கொடுப்ப தைக்கூட தடுக்கும் காவல்துறையினர், எங்கள் நலவாரியத்தில் உள்ள பணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது ஆட்டோக்களை இயக்க அனுதிக்க வேண்டும் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நீலகிரி

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள விபி தெருவில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் சமூக இடைவெளிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு நீலகிரி மாவட்ட  ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் யோகேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.