நாமக்கல், ஜூலை 14- கட்டிட கட்டுமான தொழிலா ளர்களுக்கு இலவச வீட்டு மனை மானியத்துடன் கூடிய இலவச வீட்டுவசதி வழங்க வேண்டும் என கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்க மகாசபை வலியுறுத்தி யுள்ளது. நாமக்கல் மாவட்ட கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கத் தின் 18 வது மாவட்ட மகாசபை கூட்டம் சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் ஞாயிறன்று மாவட்டத் துணைத் தலைவர் பி. மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட உதவி செயலாளர் என்.காளியப்பன் வரவேற்புரையாற்றினார். சிஐ டியு நாமக்கல் மாவட்ட செயலா ளர் ந.வேலுசாமி மகாசபையை துவக்கி வைத்து பேசினார். சங்க சம்மேளன பொதுச்செயலாளர் டி.குமார் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ஏ.ரங்கசாமி மகா சபையை வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயலாளர் கு.சிவராஜ், பொருளாளர் கே.கண்ணன் ஆகியோர் அறிக்கையை முன் வைத்து பேசினர்.
தீர்மானங்கள்
அமைப்பு சாரா தொழிலா ளர்களுக்கு பணப்பயன்கள் வழங்க தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும். கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு பிரசவ நிதி உதவியாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். திருமண உதவி தொகையாக ஆண்களுக்கு ரூ.20 ஆயிரமும், பெண்களுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். இன்ஜினியரிங் கல்விக்கு ஆண் டுக்கு ரூ.60 ஆயிரமும், மருத்துவ படிப்புக்கு ஆண்டுக்கு ஒரு லட்ச மும் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை மானியத்துடன் கூடிய வீட்டுவசதி வழங்க வேண் டும். அகில இந்திய கட்டிட கட்டு மான தொழிலாளர் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு கட்டுமான தொழி லாளர் நல வாரியம் செயல்படுத்த வேண்டும். ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் ஓய்வூதியம் நிலுவைத் தொகையு டன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து சங்கத்தின் புதிய மாவட்ட தலைவராக பி.சர போஜன், செயலாளராக கு.சிவ ராஜ், பொருளாளராக கே.கண் ணன், துணை தலைவர்களக பி.மாதேஸ்வரன், பி.துரைசாமி, துணைச் செயலாளர்களக எம்.சக்திவேல், என்.காளியப்பன் உள்ளிட்ட 17 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட் டன. முடிவில் மாவட்ட துணை தலைவர் பி.துரைசாமி நன்றி யுரையாற்றினார்.