tamilnadu

img

சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்கிடுக

தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

தாராபுரம், பிப். 28- சந்தை மதிப்பில் இழப்பீடு கோரி உயர் மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் தாரா புரம் சார் ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளியன்று முற்றுகையிட்ட னர்.   திருப்பூர் மாவட்டம், தாரா புரம், காங்கயம் தாலுகா பகுதி யில் உரிய பயிர் இழப்பீடு வழங்கா மல் விளை நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைப்பதை கண்டித் தும், சந்தை மதிப்பில் இழப்பீடு கோரியும், நில மதிப்பு நிர்ணய பட்டியல் வழங்கப்படாதக் கண் டித்தும்  தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆவேச முறையீ டும், முற்றுகை போராட்டமும் நடைபெற்றது. உயர் மின் கோபுர பாதிப்பு விவசாயிகளிடம் தாரா புரம் சார் ஆட்சியர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பேச்சு வார்த்தை நடத்தினார். விவசா யிகள் முன்வைத்த கோரிக்கைக் கும், பிரச்சனைகளுக்கும்  சார் ஆட்சியர் அளித்த பதில் திருப்தி யில்லாததால், வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் காவல்துறை கண்கா ணிப்பாளர் தலையிட்டதைத் தொடர்ந்து சார் ஆட்சியர் தலை மையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தாராபுரம், காங்கயம் தாலுகாவிற்குட்பட்ட 18  கிராமங்களுக்கு உடனே நில மதிப்பு நிர்ணய உத்திரவு உடன டியாக வழங்கப்படும். இழப்பீடு வழங்காமல் உள்ளவர்களுக்கு உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பயிர் இழப்பீடு உள்ளிட்ட கணக்கீட்டு முறையில் உள்ள தவறுகள் உடனே சரி செய்து தரப்படும். கோவை மாவட் டத்தைப் போன்ற உயர்ந்த பட்ச வழிகாட்டி மதிப்பின்படி இழப்பீடு வழங்க மாவட்ட ஆட் சியர் மூலம் விரைந்து நடவ டிக்கை எடுக்கப்படும் என உறு தியளிக்கப்பட்டது. இதனை யடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இப்போராட்டத்தில் கூட்டி யக்க ஒருங்கிணைப்பாளர் வழக் கறிஞர் மு.ஈசன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செய லாளர் ஆர்.குமார், பல்லடம் வை.பழனிசாமி, தமிழக விவ சாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் பி.ஆர்.சண்முகசுந்தரம், செயலாளர் முத்துவிஸ்வநாதன், தாராபுரம் சிவக்குமார், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ்  உட்பட ஏராள மான விவசாயிகள் கலந்து கொண் டனர்.