tamilnadu

img

குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தருக

கோவை மாநகராட்சி ஆணையரிடம் எம்எல்ஏ முறையீடு

கோவை, அக்.23- கோவையில் குடியி ருப்பு பகுதிகளில் அடிப் படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி திமுக சட்டமன்ற உறுப் பினர் நா.கார்த்திக் மாநகர ஆணையரிடம் மனு அளித் தார். திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷர்வன்குமாரை சந்தித்து மனு அளித்தார். இதைத்தொடர்ந்து நா.கார்த்திக் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை மாநகராட்சியில் பல்வேறு பிரச்ச னைகள் உள்ளது.  தற்போது பெய்து வரும் பருவ மழையால், குறிப்பாக உக்கடம் ஜிஎம் நகர், இரமலான் நகர், பாத்திமா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் பாதிக் கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் வீடுக ளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் விடிய விடிய தூங்க முடியாமல் பரிதவிக்கும் அவலநிலை உள்ளது. மேலும், மாநகராட்சி சார்பில் இங்கு மழை நீர் வடிகால் முறையான வகையில் கட்டப்படவில்லை.  பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் இல்லாததால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றை  சரி செய்ய வலியுறுத்தி மனு அளித்துள் ளோம் என்றார்.  இந்த சந்திப்பின்போது, திமுக மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பி னர் பி.நாச்சிமுத்து ஆகியோர் உடனி ருந்தனர்.