கோவை, ஆக. 26 – சாதிரீதியான துன்புறுத் தலுக்கு உள்ளான ஊராட்சி மன்ற தலித் தலைவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி பெரியாரிய உண்ர்வாளர்களின் கூட்ட மைப்பு சார்பில் கோவை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக சரிதா என்பவர் இருந்து வருகி றார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவரை, அப்பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் சாதிய ரீதியாக இழிவுபடுத்திய தோடு ஊராட்சி மன்றத் தலைவர் நாற்காலி யில் அமர விடாமல் தடுத்தும், ஊர் எல்லைப் பலகையில் பெயரை எழுத விடாமல் தடுத்ததாகவும் சரிதா புகார் அளித்தார்.
இதன் பேரில் பாலசுப்பிரமணியம் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நெகமம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், சரிதாவை சாதி ரீதியாக இழிவுபடுத்திய பாலசுப்பிரமணியத்தை கைது செய்யக் கோரியும், கொலை மிரட்ட லுக்கு உள்ளாகிய இவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் கோவை தெற்கு வட்டாட் சியர் அலுவலகம் முன்பு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆதித்தமிழர் பேர வையின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஆறுச்சாமி, தந்தை பெரியார் திராவிடர் கழக சாஜித், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குரு, திராவிடர் விடுதலை கழகம் நேருதாஸ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளா னோர் கலந்து கொண்டனர்.