tamilnadu

img

விவசாய நிலத்தில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு

கோவை, ஆக. 5 –  அன்னூர் கனேசபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மதுக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.  இதில், கோவை கோவை மாவட் டம், அன்னூர் கனேசபுரம் சிவதங் கம் நகர் பகுதியில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், விவசாய நிலங் கள் அதிகமுள்ளது. இந்நிலையில் திடீரென இப்பகுதியில் உள்ள விவ சாய நிலத்தில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை எதிர்த்து இப்பகுதி மக்கள் வெள்ளி யன்று அன்னூர் வட்டாட்சியர் அலு வலத்தில் முற்றுகை போராட் டத்தை நடத்தினர். இதன்தொடர்ச் சியாக திங்களன்று நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மதுபான கடை திறப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதா வது, இப்பகுதியில் மதுபான கடை அமைக்கப்பட்டால் திறந்த வெளி யில் மது அருந்துவர்கள், சக்தி சாலை அருகில் உள்ளதால் போதையில் வாகனத்தில் செல்லுபவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பொதுமக்கள், பெண்க ளுக்கு தேவையற்ற இடையூறு ஏற் படும் எனவும் மனுவில் தெரிவித்தி ருந்தனர். இதனை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இப்பகுதியில் மதுபான கடை வராமல் இருக்க பரி சீலனை செய்வதாக உறுதியளித் துள்ளார்.

இலவச மடிக்கணினி கேட்டு மனு 

இதேபோல், கோவை டவுன்ஹால் அருகில் உள்ள தூய காணிக்கை அன்னை மகளிர் மேல்நிலை பள்ளி மாணவிகள் அரசின் இலவச மடிக் கணினி கேட்டு மனு அளித்தனர். இதில், எங்கள் பள்ளியில் கடந்த வாரம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் அனைவருக்கும் அர சின் இலவச மடிக்கணினி அளித்துள் ளனர். ஆனால் கணினி மற்றும் அறி வியல் துறை சார்ந்த மாணவிக ளுக்கு மட்டும் மடிக்கணினி தரப்பட வில்லை. இதுகுறித்து பள்ளி நிர்வா கத்திடம் கேட்டால் எங்கள் துறை சார்ந்த மாணவிகளுக்கு தருவதற்கு இலவச மடிக்கணினி இல்லை என தெரிவிக்கின்றனர். ஆகவே, உரிய உத்தரவை பிறப் பித்து அனைவருக்கும் மடிக்க ணினி தர வேண்டும் என மனு அளித் தனர். முன்னதாக பத்துக்கும் மேற் பட்ட மாணவிகள் தங்களது பெற் றோருடன் வந்து மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர்.