tamilnadu

img

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக உறுதிமொழியேற்பு

சர்வதேச மகளிர் தினம்:

தருமபுரி, மார்ச் 13- சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில்,  தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்களுக்கு எதி ரான வன்முறை எதிராக உறுதிமொழியேற்பு நிகழ்வு  வியாழனன்று நடை பெற்றது. இந்த நிகழ்விற்கு, மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தார். இதில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன் முறையை தடுக்கவும், பெண் உரிமையை காக்கவும் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதி மொழி ஏற்றனர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ருத்ரையன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி.எம்.நெடுஞ்செழியன், மாவட்டச் செயலாளர் சி.காவேரி, பொது நூலகத்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் பேசினர்.  நிறைவாக, மாவட்ட துணை தலைவர் மகேஸ்வரி நன்றி கூறி னார். இதன்பின் கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியை சந்தித்து வழங்கப்பட்டது.