tamilnadu

மின்வாரியத்தில் தொழில் பழகுனர் பயிற்சி

 திருப்பூர், ஜூன் 30 - திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவ லகத்தில், ஐ.டி.ஐ., வயர் மேன் மற்றும் எலக்ட்ரீ ஷியன் கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு, ஒரு வருட தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மின்வாரியம் சார்பில் வழங்கப்படும் தொழிற்பழகுனர் பயிற்சிக்கான நேர்காணல், ஜூலை 2 மற்றும் 3ஆம் தேதிகளில் காலை 10 மணிக்கு நடக்க உள்ளது. இதுகுறித்து, மேற்பார்வை பொறியாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், பி.என்.ரோடு கே.ஆர்.பி.எஸ்.டவர்  வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்  பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் அலுவல கத்தில் நேர்காணல் நடக்கிறது. பயிற்சி பெறும் ஓராண்டுக்கு, மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7,709  வழங்கப்படும்.  திருப்பூர் வட்டாரத்தில், 24 நபர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணலுக்கு வரும் போது, வயர்மேன், எலெக்ட்ரீஷியன் படிப்புக்கான கல்வி  சான்றிதழ் மற்றும் மாற்று சான்றிதழ், சாதிச் சான்றிதழ்,  போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை. வேலை  வாய்ப்பு அலுவலக அட்டை, ஆதார் அட்டை, மாற்றுத் திறனாளியாக இருந்தால் அதற்கான அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் வரவேண்டும். நேர்காணலில், திருப்பூர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள் ளலாம் என தெரிவித்துள்ளார்.