tamilnadu

img

அரசு பள்ளியை நோக்கி படையெடுக்கும் தனியார் பள்ளி மாணவர்கள்

ஆசிரியர்களின் முயற்சிக்கு ஜி.ராமகிருஷ்ணன் நேரில் பாராட்டு

தனியார் பள்ளி மாணவர்களை அரசுப் பள்ளி பக்கம் வரவழைத்து தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் கோவை மலுமிச்சம்பட்டி அரசு துவக்கப்பள்ளியின் முன்னேற்றத்திற்கு உழைத்திட்ட தலைமை யாசிரியர், ஆசிரியர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து ஜி.ராமகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார். கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி பகுதியில் 1964ல் அரசு தொடக்கப்பள்ளி சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் துவங்கப் பட்டது. ஆரம்பத்தில் 450 மாணவர்கள் பயின்று வந்த இப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பு இல்லாததாலும், தனியார் பள்ளியின் மோகத்தின் காரணமாகவும் மாணவர்க ளின் எண்ணிக்கை 146 ஆக சரிந்தது. இந்நிலையில் கடந்த நான்கு வருடங்க ளுக்கு முன்பு புதிதாக பொறுப்பேற்ற தலைமையாசிரியர் சதி மற்றும் உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் தீவிர முயற்சியால் தற்போது மாண வர்களின் வருகை 288 ஆக உயர்ந் துள்ளது. குறிப்பாக அருகிலுள்ள தனியார் பள்ளிகளில் பயின்று வந்த சுமார் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது அரசு பள்ளியை நோக்கி வந்துள்ளனர்.

பள்ளியின் கட்டிடங்களை நவீனப்படுத்திய அதே வேளையில் மாணவர்களின் கற்றல் திறமையையும் மேம்படுத்தியதே இதற்கு காரணமாகும். இத்தகைய சிறப்பான செயல்பாடுகளுக்காக மாநில அரசின் விருதும், மத்திய அரசின் விருதையும் அப்பள்ளியின் தலைமையாசிரியர் சதி பெற்று இருக்கிறார்.  இதற்கிடையே, அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தும் அரசின் கொள்கை களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி களத் திலே போராடிக் கொண்டிருக்கிற அதே வேளையில், அரசுப் பள்ளிகளை பாது காக்க அதன் தரத்தை உயர்த்த போராடிக் கொண்டிருக்கும் தலைமையாசிரியர், ஆசிரியர் பெருமக்களை நேரில் சந்தித்து பாராட்ட வேண்டும் என்கிற முனைப்போடு வியாழனன்று கோவை மலுமிச்சம்பட்டி அரசு துவக்கப்பள்ளிக்கு வந்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன். இவரை பள்ளியின் வாச லில் மலர்ந்த முகத்தோடு ஆசிரியர் பெரு மக்களும், மாணவர்களும் வரவேற்றதில் நெகிழ்ச்சியடைந்தார். இதனைத்தொடர்ந்து அவர் நடத்திய கலந்துரையாடலில் பல் வேறு ஆச்சரியத்தக்க செய்திகளை நேரில் கண்டார். 

குறிப்பாக, பள்ளியின் பெரும் பகுதி யினர் தாழ்த்தப்பட்ட உழைப்பாளி மக்களின் குழந்தைகள் கல்வி பயில் கின்றனர். ஷூ, டை, பேட்ஜ் என மிடுக்கான தோற்றம் கொண்ட மாண வர்கள். சில வகுப்பறைகளில் புத்த கங்களுக்கும், புத்தகப் பைகளுக்கும் வேலை இருப்பதில்லை. புத்தகப் பைகள் வகுப்பறைக்கு வெளியே பத்திரமாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்க, வகுப் பறையில் மாணவர்கள் எளிமையான செயல் வழியில் கல்வி கற்கின்றனர். இடிந்திருந்த கட்டிடம் புனரமைக்கப்பட்டு, புதிய கட்டிடம், மார்பிள் தரை, குடிநீர் வசதி, சுற்றுச்சுவர், கூடுதல் ஆசிரியர்கள், ஸ்மார்ட் வகுப்பறை, வண்ண மேசைகள் என சில தனியார் நிறுவனங்களின் பங்களிப்பால் இப்பள்ளி மிளிர்கிறது. தலைமையாசிரியர், ஆசிரியர்களின் விடாமுயற்சியால் கல்வி மீது ஆர்வம் கொண்ட தன்னார்வலர்களை அணுகி அவர்களின் உதவியால் தற்போது  இந்த பள்ளிக்கு ஏராளமான வசதிகள் வரப்பெற்றுள்ளதை கேட்டறிந்தார்.   மேலும், வட மாநிலத்தவர்கள் ஏராள மானோர் இப்பகுதியில் வசித்து வரும் நிலையில், அவர்களது குழந்தைகள் 40 பேர் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளி வசதியின் காரணமாக மாணவர்க ளின் எண்ணிக்கையும் அதிகரித்து வரு கிறது. முன்னமே குறிப்பிட்டபடி அரு கிலுள்ள தனியார் பள்ளிகளில் பயின்று வந்த சுமார் 80க்கும் மேற்பட்ட மாண வர்கள் தற்போது இந்த அரசு பள்ளியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். மேலும், மாணவர்களுக்கு கல்வி மட்டு மின்றி ஒழுக்கங்களையும், சமூக அக்க றையையும் ஆசிரியர்கள் பயிற்றுவிப்ப தாக பெற்றோர் சங்கத்தினர் பெருமை யோடு தெரிவிக்கின்றனர். 

குறிப்பாக, ஒவ்வொரு வகுப்புக்கும் தினமும் 45 நிமிடம் ஸ்மார்ட் கிளாஸ் எடுக்கப்படுகிறது. வகுப்பில் மாணவர்க ளுக்கு என்னென்ன பாடம் இருக்குமோ, அது எல்லாம் டிஜிட்டல் வடிவத்தில் ஒலி, ஒளி வசதியிடன் இருப்பதால் எளிதாக புரியும்படி பாடம் படிக்க வசதியாக உள்ளது. மேலும் வகுப்பு நேரங்களில் மாணவர்களுக்கு டேப்லாய்ட் வழங்கி பாடங்களை பயிற்றுவிப்பதுடன், நவீன வசதிகளை பயன்படுத்தவும் கற்றுத்தரு கின்றனர். அதேபோல ஸ்மார்ட் கிளாஸ் நூலகத்தில் பாடத்துக்கு தேவையான பல்வேறு புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.  புத்தகப் பாடம் மட்டும் மாணவனுக்கு போதாது என்பதைப் புரிந்து கொண்டு எங்கெல்லாம் மாணவர்கள் பார்க்கின் றனரோ, அங்கெல்லாம் கற்க முடியும் என்ற சூழலை ஏற்படுத்தியுள்ளனர். கழிப் பறைச் சுவர்களில் கார்ட்டூன் ஓவியங்க ளோடு நன்னெறிக் கருத்துக்களை வரைந் துள்ளனர். ஏபிஎஸ் எனப்படும் பாட அட்டைகளைப் பயன்படுத்தும் கற்றல் முறை, மாணவர்களே எழுதிப்பார்க்க உயரம் குறைந்த கரும்பலகைகள், குழு விவாதம் நடத்த வண்ண வண்ண மேசைகள், கழிவு காகி தங்களில் கலைப் பொருட்கள் தயாரிப்பு என திரும்பும் திசையெங்கும் கவனம் ஈர்க்கும் கற்றல் நுணுக்கங்களால் மிளிர் கிறது இந்த பள்ளி.

வேளாண்மை குறித்த கல்வி பள்ளி களில் முன்பை விட இப்போது அதிகமாக பேசப்படுகிறது. பல இடங்களில் செயல் படுத்தப்பட்டும் வருகிறது. ஆனால் இங்கு ஒரு காலத்தில் பார்த்தீனியம் பெருகிப் படர்ந்திருந்த பள்ளி வளாகம் இன்று விளைநிலமாக மாறியிருக்கிறது. அதா வது பள்ளியின் முன்புள்ள தோட்டம் மற்றும் ஒவ்வொரு வகுப்பறைக்கும் பின் னுள்ள இடங்களை அந்தந்த வகுப்பு மாணவர்கள் பராமரிக்கின்றனர். இதில் வாழை, முருங்கை, கத்தரி என சமையல் காய்கறிகள் முதல்  பூ, எண்ணெய் வித்துக்கள், கிழங்கு வகைகள் வரை பள்ளிக்குள் விளை நிலமாக மாற்றி அசத் தியுள்ளனர். இங்கு விளையும் பொருட் களே அவ்வப்போது சத்துணவுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தடையில்லா கல்வி கற்க சுகாதாரமான சூழலும் அவசியம் என்பதை உணர்ந்து தங்களது கிராமத்தை திறந்த வெளிக் கழிப்பிடங்கள் இல்லாத கிராமமாக மாற்ற துவங்கியுள்ளனர் இந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள். குட்டி கமாண்டோ படை என்ற பெயரில் மொத்தம் பத்து மாண வர்கள், திறந்தவெளியில் மலம் கழித்து கிராமத்தை அசுத்தப்படுத்துபவர்களை விசில் அடித்து விரட்டுகின்றனர். காலை மற்றும் மாலை வேளைகளில் இப்ப ணியை இந்த மாணவர்கள் மேற்கொண்டு வருவதால், இக்கிராமத்தை சுகாதாரமாக வைத்திருக்க உதவுகின்றனர். இந்த பணிக்காக மாவட்ட ஆட்சியரின் விரு தையும் பெற்று கவனம் ஈர்த்துள்ளனர்.  மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக விருது பெற்ற இந்த பள்ளி, தற்போது கிராமத்தையே சுகாதாராமாக மாற்றி யதற்கான விருதையும் பெற்று பெருமை சேர்த்துள்ளது என்கிற தகவல்களை யெல்லாம் ஆச்சரியத்துடன் கேட்டறிந்த ஜி.ராமகிருஷ்ணன், நிறைவாக தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர் கழகத்தினர் ஆகியோரிடம் பேசுகையில், அரசாங் கமும், ஆசிரியர்களும் நினைத்தால் சிறப்பான அரசுப்பள்ளியை உருவாக் கலாம். மாணவர்களுக்கு தரமான கல்வி எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு சமூக நலன் சார்ந்த அக்கறையும் அவசி யம். அதன்மூலம் நல்ல சமூகத்தை உரு வாக்க முடியும். அத்தகைய பெருமை மிக்க பணியை மேற்கொண்டு வரும் உங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார் பிலும், என் சார்பிலும் இதயபூர்வமான பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறி விடைபெற்றார். 

 தொகுப்பு: அ.ர.பாபு