tamilnadu

img

24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனையை தடுத்திடுக

கொரோனா அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வரும் நிலை யில் கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. எனவே, இதனை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தக்கோரி கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் அனைத்து கிறிஸ்துவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறு வன தலைவர் சி.எம்.ஸ்டீபன்ராஜ், கம்பன் கலைக்கூ டம் செயலாளர் கவிஞர் மூடாரம்  மணிகண்டன் மற்றும் சிபிஎம் கிழக்கு நகரக்குழு உறுப்பினர் த.நாகராஜ் ஆகியோர் மனு அளித்தனர்.

;