கோவை மாவட்ட ஆட்சியரிடம் பி.ஆர்.நடராஜன் எம்பி. விவசாய சங்க தலைவர்கள் முறையீடு
கோவை, நவ.13– விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்கும் வழித்தடத்தை மறைத்து மூன்று விதமான வழித்தட வரைபடம் இருப்பதாக புதிதாக பவர்கிரிட் நிறு வனம் தெரிவித்திருப்பது தொடர் பாக செவ்வயன்று விவசாயிகள் சங்க தலைவர்களுடன் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையீடு செய்தானர். கோவை மாவட்டம், சுல்தான் பேட்டை ஒன்றிய பகுதியில் பவர் கிரிட் நிறுவனம் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது. அதேநேரம், விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைப் பதற்கு விவசாயிகள் தொடர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரு கின்றனர். இதனை ஒடுக்க தமிழக அரசு காவல்துறையினரை கொண்டு தாக்குவதும், விவசாயிகள் சங்க தலைவர்களை சிறையில் அடைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது விவ சாயிகள் மத்தியில் மேலும் கொந்த ளிப்பை அதிகரிக்க செய்து வருகிறது. இந்நிலையில் பவர்கிரிட் நிறு வனம் மூன்று விதமான வழித்தட வரை பட அனுமதியை வைத்து மோசடி செய்துள்ளது தற்போது வெளிச்சத் திற்கு வந்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ராஜேந்திரன், விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டோர் செவ்வாயன்று கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியை சந்தித்து முறையிட்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களி டம் பி.ஆர்.நடராஜன் எம்.பி., கூறுகை யில், சுல்தான் பேட்டை பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கையை கண்டித்து விவசாய சங்க தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட வந் தோம். குறிப்பாக, பவர்கிரிட் கார்ப்ப ரேசன் ஏற்கனவே வெளியிட்டுள்ள வழித்தடத்தை மாற்றி உயர்மின் கோபுரம் அமைக்க முயற்சி மேற்கொள் கிறார்கள். அவர்களை கேட்டால் மூன்று வகையான வழித்தடத்தை தயார் செய்துள்ளதாகவும், அதில் ஒரு வழித்தடத்தை காட்டி வங்கியில் கடன் பெற்றுள்ளதாகவும், அந்த வரை படம்தான் விவசாயிகளுக்கு இணை யத்தில் கிடைத்துள்ளதாகவும், பவர் கிரிட் நிறுவனம் எந்த இடத்திலும் வழித்தட வரைபடங்களை வெளியிட வில்லை என தெரிவிக்கின்றனர். ஏற்கனவே உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட இடங்கள் விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தாது. ஆனால் தற் போது பவர்கிரிட் நிறுவனம் நில அளவீடு செய்ய தேர்வு செய்யப்பட் டுள்ள வழித்தடம் என்பது அதிகள விலான தென்னை தோப்புகளும், விவ சாயம் நடைபெற்று வரும் நிலங்களமு உள்ள பகுதியாகும். இங்கு உயர்மின் கோபுரம் அமைக்கிறோம் என புதி தாக பவர்கிரிட் நிறுவனம் பணிகளை துவங்கியிருக்கிறார்கள்.
இதுகுறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பினால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில்தான் இந்த பணியை துவக்குகிறோம் என பதி லளிக்கிறார்கள். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து மாவட்ட ஆட்சிரிடம் மனு அளித்துள்ளோம். மேலும், மூன்று வித மான வழித்தடங்களை நாங்கள் செய்து வைத்திருக்கிறோம் என்கிற புதிய செய்தியை பவர்கிரிட் நிறுவனம் தெரிவிக்கிறது. ஆகவே. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரிக்க வேண் டும் என தெரிவித்தோம். அப்போது, இதுகுறித்து இரண்டு நாட்களில் விசாரிப்பதாகவும், அத னைத்தொடர்ந்து சுல்தான் பேட்டை பகுதிக்கே நேரில் வந்து உயர்மின் கோபுரம் அமைக்கப்படும் வழித்த டத்தை பார்வையிடுகிறேன் எனவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள் ளார். ஆகவே, உறுதியளித்தபடி மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார் வையிட்டு விவசாயிகளின் பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என கேட்டுக்கொள்கிறோம். மேலும், ஏற்கனவே எடுத்த முடி வின் அடிப்படையில் விவசாய நிலத் தில் மின்கோபுரம் அமைக்கும் நடவ டிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற நவ.18 ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பவர்கிரிட் நிறுவனத்தை கண்டித்து மறியல் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. விவசாயி களின் நலன்களை பாதுகாக்க இப் போராட்டத்தில் ஜனநாயக சக்திகள் முழுமையாக பங்கெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.
ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்துக
மேலும், பெரியநாயக்கன்பாளை யம் வரப்பாளையத்தில் அருந்ததிய மக்கள் பயன்படுத்தும் மயானத்திற்கு பாதையின்றி நீண்டகாலமாக தவித்து வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் கவனத்தில் எடுத்து அங்கு சாலை அமைத்து தரவேண்டும். இதே போல், கோவை மாநகராட்சி புதிய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. இதில் ஏற்கனவே மாந கராட்சியில் ஒப்பந்த பணியாளர் களாக பல ஆண்டுகளுக்கு மேல் பணி யாற்றி வரும் துப்புரவு தொழிலாளர் களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியில் அமர்த்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற, கிராமப்புற சாலைகள் ஏற்கனவே குண்டும் குழியுமாக உள்ளது. இந் நிலையில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சாலைகள் அனைத்தும் கடும் சேதமடைந்துள்ளது. உடனடி யாக மாவட்ட நிர்வாகம் சாலை களை சீரமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அவரும் உடனடியாக இதனை பரி சீலனை செய்வதாக தெரிவித்துள்ளார் என தெரிவித்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட் செயற்குழு உறுப்பினர் என். பாலமூர்த்தி, மாவட்டக்குழு உறுப் பினர் யு.கே.சிவஞானம், பி.கே.சுகு மாறன், ஆர்.கேசவமணி, கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.