tamilnadu

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரிப்பு- கைது

கோவை, ஜன. 28–  பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாச மாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டவரை போலீசார் கைது செய்தனர். கோவை, சிங்காநல்லூர் அருகே கோத்தாரி லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ரூபன். கட்டிட காண்ட்ராக்டரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் பழகி வந்தார்.  அப்போது ரூபன் அந்த இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை போல் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை ஆபாசமாக மார்பிங் செய்து,  அதனை இணையதளங் களில் வெளியிட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் ஆபாச மாக மார்பிங் செய்த புகைப்படங்களை அந்த பெண்ணின் வீட்டாருக்கும் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் சிங்காநல்லூர் போலீசில்  புகார் அளித்தனர். இந்நிலையில் இப்புகாரினை தொடர்ந்து, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன் படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய  பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ரூபனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

;