திருப்பூர், ஜூன் 27 – தாய்லாந்து நாட்டில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, ஓட்டலில் கொத் தடிமை வேலைக்கு சேர்க்கப்பட்ட மகனை மீட்க திருப்பூரைச் சேர்ந்த பனியன் பெண் தொழிலாளி போராட்டம் நடத்தி வருகிறார். திருப்பூர் அருகே குளத்துப் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள். பனியன் தொழி லாளி. இவருக்கு மணித்துரை, மணி கண்டன், மணி செல்வம் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். ரஞ்சித் என்பவர் வெளிநாடு களில் வேலைக்கு ஆட்களை சேர்த்து வருவதாகக் கூறியதை நம்பி, மாரியம்மாள் தனது இரண்டு மகன்கள் மணித்துரை, மணி கண்டன் ஆகியோருக்கு வேலை கேட்டு ரஞ்சித்தை தொடர்பு கொண்டார். தாய்லாந்து நாட்டி லுள்ள பின்னலாடை நிறுவ னத்தில், ரூ.42 ஆயிரம் மாத சம்பளம் தருவதாக ரஞ்சித் பொய்த்தகவல் கூறி, அதற்கு ரூ.2.70 லட்சம் பணம் செலுத்த வேண்டும் என கேட்டி ருக்கிறார். மாரியம்மாளும் அந்த பணத்தை ஏற்பாடு செய்து ஏஜெண்ட்டான ரஞ்சித்திடம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து கடந்த ஜனவரி 21ஆம் தேதி ஏஜெண்ட் ரஞ்சித் மூலம் மணித்துரை மற்றும் மணி கண்டன் இருவரும் தாய்லாந்து நாட்டிற்குச் சென்றுள்ளனர். இதனிடையே தாய்லாந்து சென்ற மகன் தொலைபேசியில் தனது தாய் மாரியம்மாளை தொடர்பு கொண்டு, இருவரையும் பின்னலாடை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்க்காமல் ஓட்டலில் வேலைக்கு சேர்த்ததாகவும், மேலும் அவர்களை சுற்றுலா விசாவில் அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து மாரியம்மாள் திருப்பூர் கே.வி.ஆர் நகர் காவல்.நிலையத்திலும், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவல கத்திலும் ,மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தார். எனினும் அரசுத் தரப்பில் எவ் வித முயற்சியும் மேற்கொள்ளாத நிலையில், தாய்லாந்தில் உள்ள ஓட்டல் உரிமையாளரை நேரடி யாக தொடர்பு கொண்டு தனது மகன்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும்படி கோரியுள்ளார். ஓட்டல் உரிமையாளர் ரூ.58 ஆயிரத்தை தனது வங்கி கணக் கிற்கு அனுப்பினால் இளைய மகனை விடுவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து மாரியம்மாள் ரூ.58 ஆயிரத்தை தாய்லாந்து ஓட்டல் உரிமையாளரின் வங்கி கணக் கிற்கு அனுப்பி இருக்கிறார். எனவே மணிகண்டனை கடந்த 13ஆம் தேதி சென்னைக்கு அனுப்பி வைத் தனர். மாரியம்மாள் தனது மூத்த மகன் மணித்துரையை மீட்டுத்தரக் கோரி கடந்த இரு நாட்களுக்கு முன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்திருந்தார். இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட் டரில் வெளியிட்டிருந்த அறிக் கையில், மாரியம்மாளின் மூத்த மகன் மணித்துரையை தாய்லாந்தி லிருந்து கொண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் நமது தூதரகம் அளித்து வருவதாகவும், திருப்பூரில் உள்ள அவரது குடும் பத்தினருக்கு அனைத்து தகவலும் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார். ஆனால் தாய் லாந்தில் உள்ள இந்திய தூதரகத் திலிருந்து மாரியம்மாளை தொடர்பு கொண்டு, மூத்த மகனான மணித் துரையை இந்தியா அனுப்பி வைக்க பற்றுத் தொகை செலுத்த நேரிடும், அத்தொகையை தயாராக வைத்து கொள்ளும்படி கூறியுள்ளனர். இதனால் செய்வதறியாது தவித்த மாரியம்மாள், ஒரு வேலை உணவுக்கே வழியின்றி, கடனை வாங்கி இரு மகன்களையும் தாய் லாந்து அனுப்பி வைத்த நிலையில், இன்று தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து, மகனை இந்திய அனுப்ப பற்றுத்தொகையை செலுத்த வேண்டும் என்ற கூறி யுள்ளதால், என்ன செய்வதென்று தெரியாமல் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.