பொள்ளாச்சி, ஆக. 22- பொள்ளாச்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட பூங்கா நிலத்தினை நகராட்சி அதிகாரிகள் மீட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி - பல்லடம் சாலை, ரத்தின சபாபதிபு ரத்தில் நகராட்சிக்குட்பட்ட பூங்கா நிலம் உள்ளது. இந்தப் பூங்கா நிலத்தை ஒரு நபர் ஆக்கிரமித்து விளை யாட்டு அரங்கம் அமைத் துள்ளதாக நகராட்சி அதி காரிகளுக்குப் புகார் வந்ததுள்ளது. இதை யடுத்து நகராட்சி ஆணையாளர் காந்தி ராஜ் உத்தரவின்பேரில் நகரமைப்பு ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் அந்த இடத்தை சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்ததில் நகராட்சிப் பூங்கா இடம் ஆக்கிரமிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து சுமார் ரூ.1 கோடி மதிப் புள்ள நிலத்தை நகராட்சி அதிகாரிகள் மீட் டனர். இதைத்தொடர்ந்து நகராட்சி பூங்கா நிலம் என அறிவிப்புப் பலகை வைக்கப் பட்டது. மேலும், அந்த நிலத்தில் நகராட்சி சுகாதாரப் பிரிவு மண்டல அலுவலகம் அமைத்து மரக்கன்றுகள் வைக்க நடவ டிக்கை எடுக்கப்பட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.