பொள்ளாச்சி, டிச.15 - கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 80ஆவது இலக்கிய வட்டம் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிறன்று நடை பெற்றது. கோவை மாவட்டம் பொள்ளாட்சியில் ஒவ் வொரு மாதமும் இலக்கிய வட்ட சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 80ஆவது இலக்கிய சந்திப்பு கடந்த ஞாயிறன்று பொள்ளாச்சி அரிமா சங்கத்தில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவர் க.அம்ச ப்ரியா தலைமை வகித்தார். செயலாளர் இரா.பூபாலன் வரவேற்றார். நிகழ்வில் கவிஞர் கோ.லீலா எழுதிய ‘மறை நீர்’, கவிஞர் முகமது பாட்சாவின் ‘ஆரிகாமி வனம்’ , கவிஞர் கவிஜி எழுதிய ‘எறும்பு முட்டுது யானை சாயுது ‘, கவிஞர் மதுராவின ‘சொல் எனும் வெண்புறா’ ஆகிய நூல்கள் அறிமுகம் செய்யபட்டன. மேலும் நிகழ் வில் கல்லூரி மாணவர்கள் உருவாக் கிய ஒரு மதிப்பெண் என்ற குறும் படத்தை எழுத்தாளர் சுரேஸ்வரன் வெளி யிட்டார். முன்னதாக கவிஞர் கோ.லீலா பேசு கையில், நீரின்றி அமையாது உலகு என்பது முன்னோர் வாக்கு. நிலத்தடி நீர் உட்பட நன்னீரின் அளவு பூமியில் குறைந்து கொண்டே வருகிறது. கண்ணுக்குத் தெரியும் நீரைப் பாதுகாப்பது குறித்து ஓயாமல் பேசி வரும் நாம், நாம் பயன் படுத்தும் ஒவ்வொரு பொருளின் தயாரிப் பிலும் ஒளிந்திருக்கும் கண்ணுக்குத் தெரி யாத மறை நீர் பற்றி யோசிக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். ஒவ்வொரு சிறு பொருளின் பின்னாலும் அதன் தயாரிப்புக் கென செலவிடும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலை நாடுகளுக்கு அந்த விழிப்புணர்வு வந்ததால் தான் அதிகம் தண்ணீர் செலவாகும் சிறு பொருட்கள் தயாரிப்பை வளரும் சிறு நாடுகளின் தலை களில் கட்டி விடுகின்றன. இந்த விழிப் புணர்வு அரசு, மக்கள் மற்றும் ஊடகங் களுக்கு வரவேண்டும், என்று குறிப் பிட்டார்.