tamilnadu

img

பொள்ளச்சி: ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி - கைது

பொள்ளாச்சி, மார்ச் 14- பொள்ளாச்சியில் ஏடிஎம் இயந்தி ரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்ற னர். கோவை மாவட்டம், பொள்ளாச் சியில் ராஜா மில் ரோட்டில் உள்ள எச்டி எப்சி வங்கியின் ஏடிஎம் சேவை செயல் படுகிறது. இந்நிலையில், சனியன்று இந்த ஏடிஎம் இயந்திரத்தை நோட்ட மிட்ட மர்ம நபர் ஏடிஎம்மில் புகுந்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளார். ஆனால், பணத்தை எடுக்க முடியாததால் அங்கி ருந்து தப்பி சென்றுள்ளார். இச்சம்ப வம் ஏடிஎம் அறையிலுள்ள கண்கா ணிப்பு கேமிராவில் பதிவானது.   இத்தகவலின் அடிப்படையில் சம் பவ இடத்திற்கு   விரைந்த பொள்ளாச்சி மேற்கு காவல் துறையினர் ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்தும், ஏடிஎம் அறையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளின் புகைப்படங்களை வைத்து விசா ரணை மேற்கொண்டனர் .  இவ்விசாரணையில், தேனி மாவட் டம் தெற்கு ஜெகநாதபுரம் அருகி லுள்ள பழனிச்செட்டிபட்டி ஊரைச் சேர்ந்த ஹரிபிரசாத் (28 ) என்பவர் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட் டது தெரியவந்தது. இதையடுத்து அவரைபிடித்த கவால்துறையினர் ஏடிஎம் கொள்ளை முயற்சி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர் . முன்னதாக, கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிக ளில் வீடு புகுந்து நகைகள் கொள்ளை யடிப்பது அதிகரித்துள்ளது.  இந்நிலை யில் ஏடிஎம் மையங்களை குறிவைத்து திருட முயற்சித்து வரும் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

;