tamilnadu

பொள்ளாச்சி முக்கிய செய்திகள்

வால்பாறை: கேள்விக்குறியாகும் வாழ்வாதாரத்தால் இடம்பெயரும் தோட்ட தொழிலாளர்கள்

மக்கள் பிரதிநிதிகள், அரசு நிர்வாகம் தலையிட சிஐடியு வலியுறுத்தல்

பொள்ளாச்சி, செப்.3-   குறைந்தபட்ச ஊதியம் இல்லாமை, வன விலங்கு தொல்லை, சுகாதார சீர்கேடு  போன்றவற்றின் காரணமாக வால்பாறை யில் உள்ள பெரும்பாலான மக்கள் சிறிது, சிறுதாக வெளியேறும் நிலை ஏற்பட்டுள் ளது. ஆகவே, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர், அரசு நிர்வாகங்கள் உடனடி யாக தலையிட வேண்டும் என சிஐடியு வால்பாறை தோட்ட தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.பரமசிவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சியில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலா னோர் தேயிலைத் தோட்டத் தொழிலா ளர்கள். இச்சூழலில் தேயிலைத் தோட் டத்தில் நிலவும் கூலி உயர்வு பிரச்சனை மற்றும் தேயிலைத் தோட்ட முதலாளி களின் பழிவாங்கும் நடவடிக்கைகளால் இப்பகுதியில் பணி புரியும் தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக, தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்களுக்கு மாதவிடாய் காலங்களில் கூட விடுப்பு அளிப்பதில்லை. இதனையும் மீறி பெண் தொழிலாளர்கள் விடுப்பு எடுத்தால்  அவர்களை  தேயிலை தோட்ட முதலாளிகள் காட்டு வேலை உள்ளிட்ட கடுமையான வேலைகளுக்கு பயன்படுத்துகின்றனர். அதுவும், சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். இதேபோல், வால்பாறை பகுதியில் வசிக்கின்ற பொதுமக்கள் வருமான சான்றி தழ்,  சாதிச் சான்றிதழ் போன்ற சான்றிதழ் களை எளிதில் பெற முடியாத நிலை உள் ளது.  ஏனெனில், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும்பாலும் அதிகாரிகள் பணியில் இருப்பதே அரிதாக உள்ளது.  இதேநிலைதான்  தொழிலாளர் நல அலுவ லகத்திலும் உள்ளது. இதனால் வால்பாறை யைச் சேர்ந்த தொழிலாளர்கள்  வருங்கால வைப்பு நிதி போன்ற பணப்பயன்களை பெற வருங்கால வைப்பு நிதி அலுவலகங் களுக்கும்,  தொழிலாளர்  நல அலுவலகங்க ளுக்கும் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்யும் அவல நிலை இருப்பதுடன், பெரும்  அலைகழிப்பிற்கும் உள்ளாகும் நிலையே காணப்படுகிறது. இதேபோல், மருத்துவ வசதி, சுகா தார வசதி என எதுவும் இல்லாமல் வால் பாறை பகுதி பொதுமக்கள் பெரும் இன் னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அதிகரித்து வரும் வனவிலங்கு தாக்குதல் போன்றவற்றின் காரணமாகவும் அங்குள்ள மக்கள் சிறிது சிறிதாக வால் பாறை மலையை விட்டு வெளியேறி வரு கின்றனர். ஆகவே, இதுபோன்ற பிரச்ச னைகளில் உடனடியாக வால்பாறை சட்ட மன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள்  பிரதிநிதிகள், மாவட்ட அரசு நிர்வாகம் கவனம் செலுத்தி தோட்ட தொழிலாளர் களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். அரசு நிர்வாகத்தின் அலட்சி யம் தொடருமானால் சிஐடியு தோட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்ட இயக்கங்களை முன்னெடுக்க திட்டமிடப் படும் என அந்த அறிக்கையில் தெரிவித் துள்ளார்.

மலைப்பாம்பு பிடிபட்டது

பொள்ளாச்சி, செப்.3 - பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் புளிய கண்டி தோட்டக் கலைத் துறை அலுவலகத்தின் அருகே திங்களன்று  நள்ளி ரவில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பபை கண்ட  அப்பகுதியினர் வனத்துறை யினருக்கு தகவல் அளித்த னர். இதையடுத்து சம்பவ  இடத்திற்கு வந்த வனத் துறையினர் மலைப் பாம்பை பாதுகாப்பாக பிடித்து ஆழியார் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.