tamilnadu

மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு

திருப்பூர், நவ. 18 – திருப்பூரில் நவம்பர் 17ஆம் தேதி ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற செந்தொண்டர் பேரணி சிறப்பாக நடத்தப் பட்டது. இந்நிலையில் மக்களுக்கு இடை யூறாக கொடிகள் கட்டியதாகக் கூறி, மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் மற்றும் மாநகரக் குழு உறுப்பினர்கள் பி.பாலன், ஒய்.அன்பு ஆகியோர் மீது திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரில் மார்க்சிஸ்ட் கட்சி யின் நவம்பர் புரட்சி தின செந்தொண்டர் பேரணி கடந்த மூன்றாண்டு காலமாக தொடர்ந்து சிறப்பான முறையில் நடத் தப்பட்டு வருகிறது. இதில் குடியிருப்புப் பகுதிகளிலும், சாலையோரங்களிலும் பொது மக்களுக்கும், வர்த்தகர்கள், வியா பாரிகள் உள்ளிட்டோருக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் கொடிகள், தோர ணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலமாக செந்தொண்டர் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் இந்து முன்னணி போன்ற மதவாத அமைப்புகள் தார்ச் சாலைகளில் இயந்திரங்கள் மூலம் துளையிட்டு இரும்பு குழாய்களில் கொடிகளைக் கட்டி, நட்டு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். அத்துடன் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் குறுக்காக தோரணங்கள் கட்டுவது, வீதி களில் போக்குவரத்தை மறித்து பந்தல் அமைத்து நான்கைந்து நாட்களுக்கு நிகழ்ச்சி நடத்துவது என மக்களுக்கும், போக்குவரத்துக்கும் பலவாறு இடையூறு களை ஏற்படுத்தி வருகின்றனர். ஆளும் கட்சியினர் நிகழ்ச்சிகளும் விதிமுறை களைக் காற்றில் பறக்கவிட்டு நடத்தப்படு கின்றன. இதுபோன்ற சம்பவங்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் காவல் துறை, முறையாக நடத்தும் நிகழ்ச்சிக்கு வழக்குப் பதிவு செய்துள்ளது ஜனநாயக எண்ணம் கொண்டோருக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.