tamilnadu

img

தனியார் ஆம்னி பேருந்து நிறுத்த போலீசார் அனுமதி அதற்கான பலகையில் அரசு முத்திரை

கோவை, மார்ச் 19- கோவை காந்திபுரம் பேருந்து  நிலையம் அருகில் ஆம்னி பேருந்து நின்று செல்வதற்கான அனுமதியை கோவை மாநகர காவல்துறையினர் வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பல்வேறு மாவட்டங் களில் ஆம்னி பேருந்துகள் நகரத்திற் குள் வராமலேயே புறநகர் பகுதியி லேயே நிறுத்திவைக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்திலேயே அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க மாநகர மான கோவை நகரில் ஆம்னி  பேருந் துகளை அனுமதிப்பதே நெரிசலுக்கு வழிவகுக்கிற நிலையாகும்.  இந்நிலையில், காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் முன்பு ஆம்னி பேருந்துகள் நின்று செல்வதற்கு காவல்துறை அனுமதியளித்துள்ளது. இதனால் பெரும் போக்குவரத்து நெரி சல் ஏற்படும் அபாயம் உள்ளது. தற் போதே வெள்ளி மற்றும் சனிக்கிழமை களில் நகரத்திற்குள் ஆம்னி பேருந்து கள் ஆங்காங்கே நிறுத்தி பயணி களை கூவிக்கூவி அழைத்து ஏற்றிச்  செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  இந்நிலையில் காவல்துறையே அங்கீகாரம் அளித்து போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கிறதோ என் கிற ஐயம் எழுந்துள்ளது.  மேலும் தனி யார் ஆம்னி பேருந்து நிறுத்த பலகை யில் அரசு முத்திரை இடம் பெற்றுள் ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளதென சமூக ஆர்வலர்கள் தெரி வித்துள்ளனர்.