அன்னூர், ஜூலை 22- அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட 4வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தலைமையில் பொது மக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டு பனைதோப்பு மயில் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெரு விளக்கு எரிவதில்லை. சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் துர் நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள் ளாகி வருகின்றனர். மேலும்,தனிநபர் கழிப்பிடம் வசதி ஏற்படுத்திட வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றி யத் தலைவர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்னூர் ஒன் றிய குழு உறுப்பினர் சுகுமாரன் மற்றும் பொதுமக்கள்உள்ளிட்டோர் பேரூ ராட்சிநிர்வாகத்திடம் மனு அளித் தனர். இதுகுறித்து அன்னூர் பேரூ ராட்சி அதிகாரிகள் கூறுகையில் 7 நாட்களுக்குள் கோரிக்கை நிறை வேற்றப்படும். தனிநபர் கழிப்பிடம் இல்லாதவர்களுக்கு உடனடியாக கழிப்பிடம் கட்ட ஏற்பாடு செய்து தரு கிறோம் என உறுதியளித்தார்.