நாமக்கல், ஜூலை 8- கொல்லிமலை மலைவாழ் மக்களிடம் கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், திருப்புலிநாடு ஊராட்சி மூடு பாளி நடுவில் 30க்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள் குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இவர்கள் விவசாயக் கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின் றனர். அப்பகுதி மக்களிடம் 7.3.2019 ஆம் தேதியன்று நாமக்கல்- திருச்சி சாலை யில் உள்ள சக்தி கல்வி கலாச்சார அறக் கட்டளையின் நிறுவனர் சக்திவேல் என்பவர் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் கடன் பெற்றுத் தருவதாக கூறி அதற்காக, முன்பணமாக ரூ.1,750 தரவேண்டும் எனக் கூறி பெற்றுக்கொண்டு, இதுவரை அவர்களுக்கு கடன் தொகை பெற்று தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து பலமுறை அவரிடம் முறையிட்ட போது இன்று, நாளை என ஏமாற்றி வந்தனர். மேலும், நாமக்கல்லில் செயல்பட்டு வரும் அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது உங்களுக்கு கடன் வாங்கி தர முடியாது என்று அடியாட்களை வைத்து மிரட்டி அனுப்பி விட்டனர். இந் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் நாமக்கல் மகளிர் காவல்நிலையத்தில் ஞாயிறன்று புகார் மனு அளித்தனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் திங்களன்று மோசடி செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திலும், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.