tamilnadu

img

மயான இடத்தை மீட்டுத்தரக்கோரி மனு

சேலம், செப்.20- மயான இடத்தை மீட்டுத் தரக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி  சார்பில் மனு அளிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதியில் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆதிதிராவிடர், அருந்ததிய மக்களுக்கான சொந்தமான மயான இடம்  உள்ளது. இந்த மயான இடத்தை அரசு அதிகாரிகள் தனி நபருக்கு பட்டா போட்டு வழங்கி உள்ளனர். இதில் அரசியல் தலையீடு அதிகளவில் இருந்த தாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்மந்தப் பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஆதி திராவிடர், அருந்ததிய மக்கள் கோட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் கோட்டாட் சியர் பட்டாக்களை ரத்து செய்ய மறுத்துள்ளார். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரணி மாநில செயலாளர் இமயவர்மன் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளியன்று சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மயான இடத்தை மீட்டு  தரக்கோரி மனு அளித்தனர். அப்போது, விடுதலை  சிறுத்தை கட்சியின் சேலம் மேற்கு மாவட்டச் செய லாளர் அய்யாவு, ஊர் நாட்டாமை சித்தேஸ்வரன் மற்றும் 50க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.