tamilnadu

img

உள்ளாட்சி, மின் துறையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக

ஈரோடு, ஜூலை 28- மின்வாரிய ஒப்பந்த தொழி லாளர்கள் மற்றும் உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் தினக்கூலி துப்புரவு தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என  சிஐடியு ஈரோடு மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு ஈரோடு மாவட்ட 10ஆவது மாநாடு ஜுலை  27, 28 ஆகிய தேதி களில் செங்கோட்டையா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஹெச். ஸ்ரீராம் தலைமை வகித்தார். மாநில செயலா ளர் கே.சி.கோபி குமார் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின்  மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனு சாமி, விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.சண்முகவள்ளி ஆகியோர்  வாழ்த்தி பேசினர். சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன் நிறைவுரையாற்றினார்.

தீர்மானங்கள் 

ஈரோடு மாநகரில் பாதாள சாக்கடை, ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், மின்சார கேபிள் பதிக்கும் பணி ஆகியவற்றை உட னடியாக நிறைவேற்றி தோண் டப்பட்ட சாலைகளை சீரமைக்க கொடுக்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளை செய்து  வருகின்ற ஒப்பந்த தொழிலாளர் களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும்.  உள்ளாட்சித் துறைகளில் பணியாற்றி வரும் தற்காலிக பணி யாளர்களுக்கு அரசாணைப்படி குறைந்தபட்சக் கூலி வழங்கப்பட வேண்டும். பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் துப் புரவு தொழிலாளர்களைப் நிரந்தர பணியாளர்களாக மாற்றி உத்தர விட வேண்டும். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நரம் பியல் மருத்துவர்கள் உட்பட பல் வேறு சிறப்பு மருத்துவர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்  எனபன உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

புதிய நிர்வாகிகள் தேர்வு
இம்மாநாட்டில் ஈரோடு மாவட்ட இந்திய தொழிற்சங்க மையத்தின் புதிய தலைவராக எஸ்.சுப்ரமணியன், செயலாளராக எச்.ஸ்ரீராம், பொருளாளராக கே.மாரப் பன், துணைத் தலைவர்களாக ஆர்.ரகுராமன், என்.முருகையா, எம்.அர்த்தநாரி, எஸ்.மாணிக்கம், கே.சுப்பிரமணியன்,  பி.குணசேக ரன்,  துணை செயலாளர்களாக சி.ஜோதிமணி,  கே.ரவி, பொன். பாரதி, பி.கனகராஜ்,  பி.ஸ்ரீதேவி மற் றும் ஆர்.செந்தில்குமார் உட்பட 50 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு  செய்யப்பட்டது.