வெற்றிலை, பாக்குடன் சிபிஎம் தலைமையில் மனு
சேலம், செப்.28- சேலம் மாநகராட்சி பகுதி களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் வடக்கு மாநகரக்குழு சார்பில் வெற்றிலை, பாக்குடன் மாநக ராட்சி அலுவலகத்தில் வெள்ளி யன்று மனு அளிக்கப்பட்டது. சேலம் மாநகராட்சி 26ஆவது வார்டு சாமிநாதபுரம் பகுதியில் கடந்த ஏழு மாதங்களாக சாலை பழுதடைந்துள்ளது.இச் சாலையை உடனடியாக செப் பனிட வேண்டும். குடிநீர் நீரேற்றம் நிலையங்களில் மின் மோட் டார்கள் பழுதடைந்துள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். சாக்கடை கால்வாய்கள், நீரோடைகள் தூர் வாரப்பட வேண்டும் என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகரக் குழு சார்பில் பல முறை மாநக ராட்சி அதிகாரிகளிடம் முறையி டப்பட்டது.ஆனால்,எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இந்நிலையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியு றுத்தி வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை மையில் அப்பகுதி பொதுமக்கள் வெற்றிலை, பாக்கு, பூ, பழம், காணிக்கையுடன் தாம்பூல தட்டில் மனு வைத்து மாநகராட்சி அதிகாரி யிடம் அளித்தனர். இந்த நூதன மனு அளிக்கும் நிகழ்விற்கு கட்சியின் வடக்கு மாநகரச் செய லாளர் என்.பிரவீன்குமார் தலைமை தாங்கினார். மாநகர குழு உறுப்பினர் தேவி மற்றும் சதீஷ் குமார், நாகராஜ், சரவணன், இந்திரா ராணி, சத்யா மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.