tamilnadu

img

பேராவூரணி : மண்டல கைப்பந்து போட்டி

தஞ்சாவூர், ஜன.10- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆவணம் டாக்டர் கலாம்  பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது. கல்லூரி தலைவர் ஜெயசீலன் தலை மை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பட்டுக்கோட்டை முன்னாள் நகர மன்றத் தலைவர் எஸ். ஆர். ஜவஹர்பாபு கைப்பந்துப் போட்டி யை கொடியசைத்து தொடங்கி வைத்து  வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிப் பேசினார்.  மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில் 20 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கலந்து கொண்டன. இதில் முதலிடம் பெற்ற அறந்தாங்கி  அரசு பாலிடெக்னிக் கல்லூரி அணி  மாநில அளவில் விளையாட தகுதி  பெற்றது. அறந்தாங்கி எம்.எஸ் பாலி டெக்னிக் கல்லூரி அணி இரண்டாமிடம் பெற்றனர். பட்டுக்கோட்டை பாலி டெக்னிக் கல்லூரி அணி மூன்றாமிடம் பெற்றனர். ஆவணம் டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரி அணி நான்கா மிடம் பெற்றனர். வெற்றி பெற்ற அணி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

;