tamilnadu

img

கோழி கழிவுகளால் கடும் துர்நாற்றம் வேம்படிதாளம் மக்கள் அவதி

இளம்பிள்ளை, பிப்.21- கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் உள்ளிட்ட பல்வேறு அவதிக்குள்ளவதாக வேம்படிதாளம் பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம்  வேம்படிதாளம் ஊராட்சிக்கு உட்பட்ட   பகுதியில் இளம்பிள்ளை-காக்கா பாளையம் செல்லும்  சாலையில் ரயில்வே  பாலம் அருகில் கோழி கழிவுகள்  மற்றும்  குப்பைகள் அதிகளவில்  கொட்டப்படு கினறன. இதனால் அப்பகுதியில் துர் நாற்றம் வீசுவதுடன் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வா கத்திடம் பல முறை  தகவல் தெரிவித்தும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. எனவே, கோழிக்கழிவு மற்றும்  குப்பைகள் கொட்டப்படுவதற்கு முறை யான தொட்டிகள் அமைக்கவேண்டும். அல்லது கோழிக்கழிவுகள் கொட்டு பவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும், சுகா தாரத் துறையினரும்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.