tamilnadu

பென்னாகரம் ,தருமபுரி மற்றும் சேலம் முக்கிய செய்திகள்

பொருளாதார மந்த நிலை மத்திய பாஜக அரசை கண்டித்து பிரச்சார இயக்கம்

பென்னாகரம், அக்.15- மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால், இந்திய பொருளாதாரம் மந்த நிலை அடைந்துள்ளது. இதனைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் செவ்வாயன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது.  மத்திய பாஜக அரசு, பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, கார்ப்ப ரேட்களுக்கு வரி சலுகை போன்ற  நடவடிக்கையால் இந்திய பொரு ளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. இதனை கண்டித்து அக்.10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ள இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது. இதன் ஒருபகுதியாக தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இப்பிரச்சார இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரும புரி மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் வி.மாதன், வி. விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.எம்.முரு கேசன், வி.ரவி, எம்.குமார், எம்.சிவா, பென்னாகரம் பகுதிக்குழு செயலாளர் கே.அன்பு, சின்னம் பள்ளி செயலாளர் ஜி.சக்திவேல், பென்னாகரம் நகர செயலாளர் எஸ்.வெள்ளியங்கிரி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர்.

ஏரியூர்

இதேபோல், ஏரியூரில் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய  செயலாளர் கே.வி.அழகேசன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியக்குழு உறுப்பினர் என்.பி.இளங்கோவன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ஏ.காதர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தருமபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.பி.முருகன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டக்குழு உறுப் பினர் பெருமாள், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி தங்கம்மாள், சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் விடு தலைவிரும்பி, மாவட்டக்குழு உறுப்பினர் தொட்டி மற்றும் சிபிஎம், சிபிஐ கட்சிகளின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். 

திருச்செங்கோடு

நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு பகுதியில் மத்திய  அரசை கண்டித்து பிரச்சார பயணம் நடைபெற்றது. இப் பிரச்சார பயணம் சூரியம் பாளையத்தில் தொடங்கி கீழேரிப் பட்டி, ஜீவாநகர், தேவனாங் குறிச்சி, அண்ணாநகர், பால் மடை, திருநகர் காலனி, கரு வேப்பம்பட்டி, சீதாராம் பாளையம், நெசவாளர் காலனி, செங்கோடம் பாளையம்,  கைலாசம் பாளையம், எட்டிமடை புதூர், அம்பேத்கர் நகர், நாகர் கோவில் அண்ணா நகர், மலை சுற்றி ரோடு, சித்தாளந்தூர், கொல் லப்பட்டி, சி ஹெச் பி காலனி, வேலூர் ரோடு வழியாக திருச் செங்கோடு நகரின் மைய பகுதி யான அண்ணா சிலை முன்பு நிறைவு பெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ஆதிநாராயணன் சிறப்புரை யாற்றினார். இதில் சிபிஐ  நகர செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் தங்கராஜ், சிபிஎம் நகர செயலாளர் ராயப்பன்,  ஒன்றிய செயலாளர் வேலாயுதம்  ஆகியோர் தலைமை தாங்கினர். சிபிஎம் நகர குழு உறுப்பினர் சீனிவாசன்,  சிபிஐ மாவட்ட நிர்வா கக்குழு உறுப்பினர் எஸ்.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித் தனர்.  சிபிஐ மாநில கட்டுப்பாட்டு  குழு உறுப்பினர் மணிவேல் உள்ளிட்ட இடதுசாரி கட்சி களின் ஊழியர்கள்  திரளாக  கலந்து கொண்டனர். 

 

ஏரியில் ஆக்கிரமிப்பு- அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு

தருமபுரி, அக்.15- ஏரியிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி எர்ர கொல்லனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனுகொடுத்தனர்.  தருமபுரி மாவட்டம், பென்னாகரம் முதுகம்பட்டி செல்லும் வழியில் அனுமந்தராயன் ஏரி உள்ளது. ஏரியின் பரப்பளவு 30 ஏக்கருக்கு மேல் உள்ளது. ஆனால் ஏரியின் 90 சதவிகித பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தற்போது 10 சதவிகிதம் தான் ஏரியாக உள்ளது. இதில் ஏரியின் 3 பக்கங்களும் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது. எனவே ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வாரினால் நீராதாரம் உயரும். ஏரியை ஆழப்படுத்தினால் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 1500 ஏக்கர் மேல் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு விவசாயம் மேம்படும்.  மேலும் மழை காலங்களில் ஏரி நிரம்பினால் ஒரு வருடத்திற்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்கும். ஏரியை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல் நீரோடையையும் ஆக்கிரமித்து உள்ளனர். எனவே நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீரோடை  இல்லாததால் மழை காலங்களில் பட்டா நிலத்தில் 100 ஏக்கர் மேல் நீர் தேங்கி விடுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்ற  உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி

சேலம், அக்.15- சேலம் மாவட்டத்தி லுள்ள அரியானூர் அருகே ராக்கிபட்டி பஞ்சாயத்து மத்திய அரசின் காலணி பயிற்சி நிலையம் மற்றும் சாரதா அறக்கட் டளை சார்பில் பல்வேறு பகுதிகளில் ஏழைப் பெண் களுக்கு தொழில்முனைவு பயிற்சியை வழங்கப் பட்டு வருகிறது.  இதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள  ஏழை பெண்களுக்கு இலவச மாக தோல் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக் கப்பட்டு, வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.  இப்பயிற்சிக்கான உபகர ணங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஜி.காயத்ரி 30க்கும் மேற்பட்ட பெண் களுக்கு  வழங்கினார். இந்த  நிகழ்ச்சியில் சாரதா அறக் கட்டளையின் நிறுவனர் லலிதா, நிர்வாகி தாமரைக் கண்ணன், உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.