tamilnadu

பீளமேடு ஜவுளிக்கடைக்கு சென்றவர்கள் முன்வந்து பரிசோதனை செய்திடுக – கோவை ஆட்சியர்

கோவை, ஜூலை 5 - கோவை மாநகராட்சி பீளமேடு பகுதியில் செயல்படும் கணேஷா சில்க்ஸ் ஜவுளிக்கடைக்கு ஜூன் மாதத்தில் சென்று வந்தவர்கள் தாமாக முன்வந்து தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண் டுமென மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ள தாவது, கடந்த மாதம் கோவை பீளமேடு, மசக்காளி பாளையத்தில் செயல்பட்டு வரும் கணேஷா டெக்ஸ் டைல்ஸ் என்ற ஜவுளிக்கடையில் பணியாற்றிய ஊழி யர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், ஜவுளிக்கடைக்கு சென்று வந்த வர்கள் என பலருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப் பட்டதில் 45 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டனர்.  

இந்நிலையில், கணேஷா சில்க்ஸ் ஜவுளிக்கடைக்கு கடந்த ஒரு மாதமாக கோவையிலிருந்து மட்டுமல்லாது, வெளிமாவட்டங்களிலிருந்து பலரும் கடந்த ஜூன் மாதத்தில் வந்து சென்று உள்ளனர். எனவே மசக்காளி பாளையம் குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் இக்க டைக்கு வந்து சென்ற அனைவரும் தங்களைத் தாங் களே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள தெரி விக்கப்படுகிறது.  

மேலும் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல், சளி போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் தாமாக முன்வந்து தங்களின் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்க ளையோ, அரசு மருத்துவமனையினையோ அணுகி தவ றாது கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது, இவ்வாறு ஆட்சியர் குறிப்பிட்டுள் ளார்.