அவிநாசி, ஜூலை 6- அவிநாசியில் உள்ள கிராம நிர்வாக அலுவல கத்திற்கு பின்புறம் தனியார் ஆம்புலன்ஸ்களை நிறுத் திக்வைத்துக் கொண்டி ருந்தனர். இதனால் பாத சாரிகளுக்கு இடையூறாக ஏற்படுவதாக தீக்கதிர் செய்தி வெளியிட்டிருந்தது. இதன் எதிரொலியாக ஆம்பு லன்சை அப்புறப்படுத்தி பாதசாரிகளுக்கு நடை பாதை அமைத்தனர். ஆனால் தற்போது அந்த நடைபாதையில் பூங்கா அமைப்பதற்கான ஏற் பாடுகள் நடைபெற்று வருகிறது. அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பின்புறம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடை பாதை அமைக்கப்பட்டிருந்தது. இப் பாதையில் தனியார் ஆம்புலன்ஸ்கள் ஆக்கி ரமித்து நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறித்து தீக்கதிர் நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து செல்வோருக்கு தற்காலிக தடுப்பு அமைத் திருந்தது. இந்நிலையில் சனியன்று நடைபாதையில் தனியார் நிறுவனம் பங்க ளிப்புடன் பூங்கா அமைப்பதாக தெரிய வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சில நகைக் கடை உரிமையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலரும் அந்த இடத்தில் பூங்கா அமைப் பதற்காக அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் இன்னும் அனுமதி வழங்கப்பட வில்லை. தற்போது பூங்கா அமைக்கும் பணி நடைபெறுவது தங்களுக்குத் தெரி யாது என தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் கூறுகையில், இந்த நடைபாதை அமைந்திருக்கும் பகுதி நான்கு முனை சந்திப்பாகும். இச் சாலையில் விசேஷ நாட்களில் அதிகளவு போக்குவரத்து இடையூறு ஏற்படும். இதனை தவிர்ப்பதற்கு நெடுஞ்சாலைச் துறை சார்பில் நடைபாதை அமைக்கப் பட்டது. தற்போது அந்த நடைபாதையில் பூங்கா அமைந்தால் விபத்துகள் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பூங்கா அமைப்பதை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் உடனடி யாக தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.