tamilnadu

img

குழந்தைகளை பெற்றோர்கள் நூலகத்துக்கு அழைத்து செல்ல வேண்டும்

புத்தக திருவிழாவில் திரைப்பட இயக்குனர் வசந்த் பேச்சு

ஈரோடு, அக்.23- குழந்தைகளை பெற்றோர்கள் நூலகத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என புளியம்பட்டி புத் தக திருவிழாவின் நிறைவு விழா வில் திரைப்பட இயக்குனர் வசந்த் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி விடியல் அறக்கட் டளை சார்பில் 8  ஆவது புத்தக திரு விழாவின் நிறைவு விழா  நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற் றது. இதில், விடியல் அறக்கட்ட ளைத் செயலாளர் ஜெயகாந்தன் வரவேற்றார். முன்னாள் நகர் மன்ற தலைவர் பி.எஸ்.அன்பு தலைமை தாங்கினார். அம்மா மெட்ரிக் பள்ளி செயலாளர் ராணிலக்ஷ்மிஅன்பு, கே.கே.சி. சான்ஸ் பி.கே.சண்முகம், கே.வி. காளியப்ப கவுண்டர், பொதுநல அறக்கட்டளை தலைவர் ந. பழனிசாமி, பெஸ்ட் எஜுகேஷன் சேவை ராதாகிருஷ்ணன், சித்ரா சுப்பிரமணியம் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.  நிறைவு விழா வில் திரைப்பட இயக்குனர் வசந்த் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நான் நானாக இருப்பதற்கு கார ணம் புத்தகங்கள் தான். எனது  தாயார் சிவகாமி புத்தக பிரியர். அவருக்கு தினமும் நூலகம் சென்று புத்தகங்களை எடுத்து வருவேன்.

அப்படியாக ஆரம்பித்த புத்தக வாசிப்பு இன்னும் தொடர்கிறது. அசோகமித்ரன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, கல்கி, சாண் டில்யன், ஜெயமோகன், எஸ்.ராம கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து  எழுத்தாளர்களின் புத்தகங்களை யும் தொடர்ந்து வாசித்து வருகி றேன். ஒரு மனிதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது புத்தகங்கள் தான். ஒரு நாட்டின் வரலாற்றை, கலாச்சாரத்தை, பெருமையை, அறிவியல் சாத னையை, விளையாட்டை புத்த கங்கள் வாயிலாக நாம் அறி யலாம். மேலும், பெற்றோர்கள் குழந் தைகளை சுற்றுலாவிற்கு அழைத்து செல்வது போல, திரு விழாவிற்கு அழைத்து செல்வது போல நூலகங்களுக்கு, இத் தகைய புத்தக திருவிழாவிற்கும் அழைத்து செல்ல வேண்டும். நல்ல நூல்களை அறிமுக படுத்த வேண்டும். நல்ல புத்தகங்களை வாங்கி தர வேண்டும். வாசிப்பு பழக்கம் மனிதனை ஊக்கப்ப டுத்தும். உற்சாகப்படுத்தும். தன் னம்பிக்கை வளர்க்கும். ஒரு சிறிய ஊரில் தொடந்து 8 ஆவது ஆண்டாக புத்தக திருவிழாவை நடத்தும் விடியல் அமைப்புக்கு வாழ்த்துக்கள். பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் அனைவரும் தொடர்ந்து புத்தக திருவிழாவில் பங்கேற்று முழு மையாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதனையடுத்து இந்த ஆண் டுக்கான தேசிய  நல்லாசிரியர் விருது பெற்ற கரூர் பரமத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக் கண்ணன், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற பவானிசாகர் கோடேபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா, சீன அதிபரின் உருவம் பொறித்த கைத்தறி சேலையை வடிவமைத்த சிறு முகை கைத்தறி டிசைனர் தர்ம ராஜ், அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச வாய்ப்பாடுகள், இலக்கண புத்த கங்களை ஆண்டுதோறும் வழங்கி வரும் ஆசிரியர் அருள்முருகன் ஆகியோருக்கு விடியல் சாதனை விருதுகள் வழங்கப்பட்டது.  இவ்விழாவில் விடியல் தலை வர் வாணி தர்மராசு, லோகநாதன், சதீஸ்குமார், ரமேஷ், புளியம்பட்டி கிளை நூலகர் ஜனார்த்தனன் உள்ளிட்ட ஏராளமானோர் பங் கேற்றனர்.