அவிநாசி, ஜூலை 2- அவிநாயில் பிளாஸ்டிக் ஒழிப்பில் அக்கறை காட்டும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கொசு ஒழிப்பில் அக்கறை காட்டாதது ஏன் என பொதுமக்கள் கேள்வி யெழுப்பி உள்ளனர். அவிநாசி ஒன்றியம், சேவூரில் வாரந் தோறும் திங்களன்று சந்தை நடை பெறுவது வழக்கம். இந்த சந்தையில் 20க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பொருட்களை விற் பனை செய்து வருகின்றனர். இந் நிலையில் ஜனவரி 1ந் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தமிழக அரசு தடை செய்தது. இதனையொட்டி அனைத்து ஊராட்சி களிலும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டன. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பிளாஸ்டிக் குறித்து ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்து வரு கிறார். இதுகுறித்து விவசாயிகள், சிறு தொழில் செய்பவர்கள் கூறுகையில், பிளாஸ்டிக் ஒழிப்பில் தீவிரம் காட்டும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வெளிநாட்டு கம்பெனி களால் தயாரிக்கப்படும் தின்பண்டங்களில் பிளாஸ்டிக் கவரில் தான் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மீது தடை விதிக்காது ஏன்? என்றனர். மேலும் அன்றாட வயிற்றுப் பிழைப்பிற்காக சிரமப் படும் எங்களிடம் தீவிரம் காட்டும் ஊராட்சி மன்ற ஆணையாளர் வெளிநாட்டு கம் பெனிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதேபோல் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், தமிழகத்தில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் முதல் பெரி யோர் வரை உயிர் இழப்பு ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் அவிநாசி ஒன்றியத்தில் உள்ள 31 கிராம பஞ்சா யத்துகளில் பகுதிகளில் சாக்கடை வசதிகள் இல்லாமல் உள்ளது. இருக்கும் சாக்கடையை சரியாக பராமரிக்கப்படாமல் கழிவு நீர் சாலைகளில் செல்லும் அவல நிலை நீடிக்கிறது. இதையெல்லாம் சுத்தம் செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இதை பற்றி கவலை கொள்ளாத ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பிளாஸ்டிக் ஒழிப் பில் தீவிரம் காட்டுவது ஏன்? என கேள்வி யெழுப்பினர். மேலும் அவிநாசி ஒன்றிய 31 ஊராட்சிகளில் கொசு மருந்து அடித்து கொசு ஒழிப்பில் தீவிரம் காட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.