tamilnadu

img

சாலை அமைக்க ஈத்கா மைதானத்தில் மண் எடுக்க எதிர்ப்பு

அவிநாசி, ஆக. 18-  சேவூரில் முஸ்லீம் மக்களின் ஈத்கா மைதானத்தில் (கபரஸ்தான்) சாலை பணிக்காக மண் எடுத்த இயந்திரத்தை சிறை பிடித்து வெள்ளியன்று போராட் டடத்தில் ஈடுப்பட்டனர். சேவூர் ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதில் சேவூர் வடக்கு வீதி பகுதியிலும், சேவூர் ஏரிமேடு பகுதியிலும் இஸ்லாமியர்கள் சுமார் 1000 க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரு பகுதிகளிலும் பள்ளிவாசல் உள்ளது. இவர்களுக்கான கபரஸ் தான் (இறந்தவர்களை அடக்கம் செய்ய ஈத்கா மைதானம்) சந்தையப் பாளையம் அருகே சுமார் 1 ஏக்கர் பரப் பளவில் இடம் உள்ளது. இந்நிலையில் சேவூர் வடக்கு வீதி கோபி சாலையிலிருந்து சந்தையப் பாளையம் வழியாக புளியம்பட்டி சாலைவரை இணைப்பு சாலை உள் ளது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த தார்ச்சாலை குண்டும், குழியு மாக இருந்து வந்தது. இதனால் வாக னங்களில் செல்வோர் மிகவும் சிர மத்திற்குள்ளானார்கள். இதைத் தொடர்ந்து இச்சாலையை சீரமைக் கும் பணி வியாழனன்று தொடங்கி யது.

முஸ்லீம்களின் ஈத்கா மைதானத்தில் மண் எடுப்பு

இந்நிலையில்  சாலைபணிக்காக அப்பகுதியில் அமைந்துள்ள முஸ்லீம் களின்  ஈத்கா மைதானத்தில் மண் எடுப்பது தெரிய வந்தது. இதையறிந்த முஸ்லீம் மக்கள்  ஒன்று திரண்டு மண் எடுத்துக் கொண்டிருந்த ஜே.சி.பி. வாகனத்தை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவல றிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேவூர் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் ஒப்பந்ததாரர் மண் எடுத்தது தவறு என்று ஒப்புக் கொண்டு இனிமேல் மண் எடுக்க மாட்டேன் எனவும் மண் எடுத்த இடத்தை சீரமைத்து கொடுப்பதாக உறுதியளித்தார்.