சேலம், ஆக.23- சேலம் உருக்காலையை மத்திய அரசு தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உருக்காலைத் தொழிலாளர்கள் தொடர்ந்து 19ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலை சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ளது. இதில் சுமார் 2 ஆயிரத் திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந் நிலையில் சேலம் உருக்காலை நஷ் டத்தில் இயங்கி வருவதாக கூறி, தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து சர்வதேச அளவிலான ஒப்பந்ததை மத்திய அரசு கடந்த மாதம் அறி வித்தது. இதற்கு உருக்காலை தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரி வித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசு தற்போது சர்வதேச ஒப்பந்தம் அறி வித்துள்ளதையடுத்து தனியார் யாரும் சேலம் உருக்காலையை பார்வையிட ஆலையினுள் அனு மதிக்க கூடாது என வலியுறுத்தி ஆலையின் பிரதான நுழைவு வாயில் முன்பு உருக்காலை தொழிலாளர்கள் 19ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளியன்று 19 வது நாளாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் அமைப்பான எல்எல்எப் மாநில துணைச் செய லாளர் பகுத்தறிவாளன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். மேலும் காத்திருப்பு போராட் டத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும், தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.