tamilnadu

img

திமுக  உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் கடும் எதிர்ப்பு

உடுமலையை அடுத்த பெரிய கோட்டை ஊராட்சி மாரியம்மன் நகரில்  தேர்தல் விதிமுறைகளை மீறி   தமிழக அரசின் ஆடு, கோழி வழங்கும் திட்டத்திற்கான  விண்ணப்பங்களை அதிமுகவினர் வழங்கினர். இதற்கு திமுக  உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினரை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர். அதேநேரம், இப்பிரச்சனை தொடர்பாக தகவல் தெரிந்தும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வராமல் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டதால் பிறகட்சியினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

;