திருப்பூர், ஜூலை 22 - திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டு றவு விற்பனை சங்கம் சார்பில் அரசு ஆதார விலை கொப்பரை கொள்முதல் மையம் திறந்து வைக்கப்பட்டது. மாநில கூட்டுறவுத் துறை அமைச் சர் செல்லூர் கே.ராஜு, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடு மலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இம்மையத்தை திங்களன்று துவக்கி வைத்தனர். உலக அளவில் தென்னை சாகுபடி பரப்பில் இந்தியா மூன்றா வது இடத்திலும், தேங்காய் உற்பத் தியில் முதல் இடத்திலும் உள்ளது. உற்பத்தி திறனிலும் அதாவது ஒரு ஹெக்டருக்கு 10, 616 தேங்காய்களை உற்பத்தி செய்து இந்தியா உலக அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவில் கேரளா, கர்நாடகா மாநி லத்திற்கு அடுத்த படியாக தமிழ்நாடு தென்னை சாகுபடி பரப்பிலும், உற்பத்தியிலும் மூன்றாம் இடத்தைப் பெறுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 4லட்சத்து 35 ஆயிரத்து 621 ஹெக்டர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப் படுகிறது. 1 ஹெக்டருக்கு 13,637 தேங்காய்களை உற்பத்தி செய்து தமிழகம் இரண்டாம் இடத்தில் உள் ளது. தமிழ்நாட்டில் 1 ஏக்கருக்கு சரா சரியாக சுமார் 5458 காய்கள் விளை கின்றன. கொப்பரை ஆதார விலை திட்டத் தின் மூலம் அரவை கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.95.21, பந்து கொப்பரை கிலோ ஒன்று ரூ.99.20 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருப் பூர் மாவட்டத்தில், தமிழ்நாடு கூட்டு றவு விற்பனை இணையத்தின் கொள் முதல் நிலையங்களான 5 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களின் சார்பில் அவிநாசி, பல்லடம், வாவி பாளையம், உடுமலைப்பேட்டை, மொடக்குப்பட்டி மற்றும் தாராபுரம் ஆகிய 6 இடங்களில் கொப்பரை கொள்முதல் நிலையங்கள் துவங்கப் பட்டுள்ளது என்று அமைச்சர் செல் லூர் ராஜூ தெரிவித்தார்.