tamilnadu

img

மேலும் ஒருவருக்கு கொரோனா: 10 பேர் தீவிர கண்காணிப்பு

சென்னை, மார்ச் 18- தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு தமிழக அரசு கடந்த சில வாரங்களாக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேர வையில் கேள்வி நேரத்தின் போது பேசிய  காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, “தமிழ் நாட்டில் கொரோனா பாதிப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதை விளக்க வேண்டும்” என்றார்.

இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளிக்கையில், “காஞ்சிபுரத்தை சேர்ந்த பொறியாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. அவர் குணமடைந்து வீடு திரும்பி விட்டார். தில்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தனி வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்த 10 பேரை கண்டுபிடித்து தனியாக வைத்து கண்காணித்து வருகிறோம்” என்றார். மேலும், அரசு மருத்துவமனை களில் 32 பேர் கண்காணிப்பில் உள்ள னர். பலர் தாமாக முன் வந்து ரத்தப்  பரிசோதனை செய்துள்ளனர். கொரோ னா ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யும் வசதி சென்னை ஸ்டான்லி  மருத்துவமனையிலும் தொடங்கியிருக் க்கிறோம் என்றும் கூறினார்.