திருப்பூர், ஆக. 9 – ஒரு பனியன் தொழிற்சாலையில் வேலை செய்த ஆறு பணியாளர் களின் சம்பளப் பிரச்சனையில் காவல் துறை தலையிட்டு, தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உரிமையை மறுத்து, அச்சுறுத்தி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய சம்பவம் திருப்பூ ரில் நடைபெற்றது. எனினும் ஒற்று மையுடன் உறுதியாக மேற்கொண்ட அணுகுமுறையால் நியாயம் நிலை நாட்டப்பட்டது. திருப்பூரைச் சேர்ந்த பிரீத்குமார், மகாராஜா, ரகுநந்தன் ஆகிய மூன்று பேருடன் சத்யா, சுபாஷினி, பிரேம லதா ஆகிய மூன்று பெண்கள் என ஆறு பேரும் திலகர் நகர் ஜுகானா எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு, ஸ்டோர் உள்பட அலுவலக ஊழியர்களாகப் பணி யாற்றி வந்தனர். இவர்கள் ஆறு பேரும் விபத்து மற்றும் இதர சொந்த காரணங்களுக்காகத் தனித்தனி சந் தர்ப்பங்களில் விடுமுறை எடுத்ததைக் காரணம் காட்டி நிர்வாகத்தால் வேலைக்கு வர வேண்டாம் என கடந்த மே மாதத்தில் நிறுத்தப்பட் டுள்ளனர். ஆனால் இவர்களுக்குத் தர வேண்டிய நிலுவைச் சம்பளத்தைத் தராமல், இரண்டு மாதங்களுக்கு மேலாக இழுத்தடித்தது நிர்வாகம். பல முறை தொழிற்சாலைக்கு நடையாய் நடந்தும் அலைக்கழிக்கப்பட்ட தொழிலாளர்கள், மரியாதைக் குறை வாகவும் நடத்தப்பட்டனர். இந்த நிலையில் சிஐடியு பனியன் தொழிலாளர் சங்க நிர்வாகிகளை அணுகி நிலுவைச் சம்பளத்தைப் பெற்றுத் தரும்படி முறையிட்டனர்.
இதையடுத்து சிஐடியு பனியன் தொழி லாளர் சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத் மேற்படி ஜுகானா நிறுவன மேலாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பணியாளர்க ளுக்குத் தர வேண்டிய சம்பளத்தை வழங்கும்படி பேசியிருக்கிறார். பின்னர் கம்பெனிக்கு வந்து சம்பள பாக்கியை பெற்றுச் செல்லும்படி கூறியுள்ளனர். எனவே சங்கப் பொரு ளாளர் அ.ஈஸ்வரமூர்த்தி மற்றும் ஏரியா தலைவர் பாண்டியராஜன் ஆகியோருடன் கம்பெனிக்கு ஆறு பேரும் சென்றனர். ஆனால் ஆலைவா யிலில் பல மணி நேரம் காக்க வைத்து சம்பளம் தராமல் சாக்குப் போக்கு கூறியுள்ளனர். இதையடுத்து சிஐடியு நிர்வாகி களும், தொழிலாளர்களும் நிறுவனத் தின் வாயிலில் செங்கொடியுடன் காத் திருக்கும் போராட்டத்தைத் தொடங் கினர். நிர்வாகம் ஊழியர்களுக்கு சேர வேண்டிய நியாயமான சம்பளத்தைத் தராமல் அங்கிருந்து வெளியேறுவ தில்லை என்று உறுதியுடன் இருந் தனர். இதன் பிறகு பிரச்சனையை நிர்வாகம் திசை திருப்ப முயன்றது. நிர்வாகத் தரப்பில் காவல்துறைக்கு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. எத்தனையோ நியாயமான அழைப்புகளுக்கு செவி சாய்க்காத காவல் துறை, பனியன் நிறுவன முதலாளியின் அழைப்புக்கு ஓடோடி வந்தது. அங்கு வந்து சிஐடியு நிர்வாகி களை காவல் உதவி ஆணையர் அதி காரத் தோரணையில் மிரட்டினார். நிர் வாகம் சம்பளம் தராதபோது அதைப் பற்றி கேள்வி கேட்காமல், பாதிக்கப்பட் டவர்களை காவல் துறை மிரட்டுவது சரியா என்று கேள்வி எழுப்பப்பட் டது. அதற்கு சம்பளம் தராவிட்டால் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள் என தொழிற்சங்க நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பினார் காவல் அதி காரி. தொழிலாளர் பிரச்சனையில் தொழிற்சங்கம் தலையிடாமல் வேறு யார் தலையிடுவது என்ற சட்டப்பூர்வ உரிமையுடன் நியாயமான பதில் கேள்வி எழுப்பினர் சிஐடியுவினர். அதற்கு, உங்கள் மீது வழக்குப் பதிவேன் என்று மிரட்டியதுடன், பாதிக்கப்பட்டவர்களையும் கைது செய்கிறேன் என காவல் துறையினர் மிரட்டியபோது, நாங்கள் என்ன தவறு செய்தோம், ஏன் நாங்கள் காவல் நிலையத்துக்கு வர வேண்டும்? என பெண்கள் அஞ்சாமல் துணிவுடன் கேள்வி எழுப்பி பணியப் மறுத்தனர். மிரட்டல் பழிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் உதவி காவல் ஆணை யர் சிஐடியு நிர்வாகிகள் ஈஸ்வர மூர்த்தி, பாண்டியராஜன் ஆகிய இருவருடன் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்கள் மீதும் மூன்று பிரிவுக ளில் வழக்குப் பதிவு செய்து ஆலை நிர்வாகத்துக்கு விசிவாசத்தைக் காட் டினார். இந்த வழக்கைச் சந்திப்பது என்று முடிவு செய்து, இப்பிரச்சனை யில் சிஐடியு தொடர்ந்து நியாயத்திற் காக முயற்சி மேற்கொண்டது. திருப்பூர் தொழிற்சங்க வரலாற் றில் இதுவரை கேள்விப்படாத விசய மாக, தொழிலாளர் பிரச்சனையில் சம்பந்தமே இல்லாமல் காவல் துறை அதிகார வரம்பை மீறி தலையிட்டு வழக்குப்பதிவு செய்ததை அடுத்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் அவசர கூட்டம் நடத்தி வரம்புமீறி நடந்து கொண்ட காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்ததுடன் மாநகர காவல் ஆணையரிடமும் இந்த விச யத்தைக் கொண்டு சென்றனர். அவ ரும் இப்பிரச்சனையில் தேவையில் லாமல் உதவி ஆணையர் தலையிட் டதைப் புரிந்து கொண்டார். அத்துடன் சிஐடியு சார்பில் ஜுகானா நிர்வாகம் பணியாளர்க ளுக்கு சம்பளம் தராதது, ஞாயிறு விடுமுறை தராமல் வேலை வாங்கி யது உள்பட தொழிற்சாலை சட் டத்தை மீறியது பற்றி தொழிற்சாலை ஆய்வாளர் அலுவலகத்தில் புகார் செய்தனர். இதற்கிடையே வரம்புமீறி நடந்து கொண்ட காவல் உதவி ஆணையர் திருப்பூரில் இருந்து பணி மாறுதல் செய்யப்பட்டார். சிஐடியு புகாரின் அடிப்படையில் தொழிற்சாலை ஆய்வாளர் மேற்படி தொழிற்சாலை நிர்வாகத்திடம் விசா ரணை மேற்கொண்டார். உடனடி யாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கும்படியும் உத்தரவிட்டார். ஜுகானா நிர்வாகம் காவல்துறை அதி கார வர்க்க செல்வாக்கு, மேலிடத் தொடர்பை பயன்படுத்தி தொழிலா ளர்களையும், தொழிற்சங்கத்தையும் ஏமாற்றி விடலாம் என்ற நினைப் புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தொழிலாளர்கள், சிஐடியுவுடன் உறு தியான நிலை எடுத்ததை அடுத்து 6 பேருக்கும் தர வேண்டிய நிலுவை சம்பளம் முழுமையாக வழங்கப்பட் டது. தொடக்கத்தில் ஆறு பேருக்கும் சம்பளம் இல்லை என மறுத்தும், பிற்பாடு பெண் தொழிலாளர்களுக்கு மட்டும் சம்பளம் தருவதாகவும், பின்னர் பாதி சம்பளம் தருவதாகவும் மாற்றி, மாற்றி பேசி வந்த நிர்வாகம் இப்போது வழிக்கு வந்தது. ஒருவ ருக்கு ரூ.8 ஆயிரம், 3 பேருக்கு தலா ரூ.8ஆயிரத்து 500-ம், ஒரு தொழிலா ளிக்கு ரூ.10 ஆயிரம், மேலும் ஒரு வருக்கு ரூ.15400 என மொத்தம் ரூ.58 ஆயிரத்து900 பெற்றுத் தரப் பட்டது. இத்துடன் தொழிற்சாலை சட்ட விதிகளை மீறியது தொடர்பாக மேற்படி ஜுகானா நிறுவனத்திற்கு தொழிற்சாலை ஆய்வாளர் நோட் டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி, தொடர் நடவடிக்கை எடுக்க இருப்ப தாகவும் தெரிகிறது. எந்த நிர்வாகமாக இருந்தாலும் அதிகார வர்க்க செல்வாக்கைப் பயன் படுத்தி தொழிலாளர் உரிமையை மறுத்தால், உறுதியுடன் போராடி நியாயத்தை வெல்ல முடியும் என காட்டியுள்ளது இந்த சம்பவம். (ந.நி)